அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 February 2013

போர்க்குற்றவாளியான பங்களதேஷ் தலைவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையின் எதிரொலியா இடம்பெற்ற வன்முறையில் 34 பேர் பலி


[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
1971 ஆம் ஆண்டு சுதந்திரம் வேண்டி பாகிஸ்தானிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவர், தல்வார் ஹூசைன் சயீதி மீது போர்குற்றம் சுமத்தப்பட்டது.

ஈராக் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி.

[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 
ஈராக் நாட்டிலுள்ல சன்னி, ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளுக்கிடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. அங்கு ஷியா முஸ்லிம் பிரதம மந்திரி நௌரி அல் மாலிகியின் ஆட்சிக்கு எதிராக, பல்லாயிரக்கணக்கான சன்னி முஸ்லிம்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த தாய்லாந்து அரசு இஸ்லாமிய போரளிக்குழுவுடன் அமைதி ஓப்பந்தம்

[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 
தாய்லாந்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 2004-ஆம் ஆண்டு முதல் கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இக் கலவரத்தால் இதுவரை 5000-ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகமாக தேடப்பட்டுவரும் 109 தீவிரவாதிகளின் பெயர்களை பாகிஸ்தான் அறிவித்தது

[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 
உலகில் வன்முறை நடக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் அரசு, லஷ்கர் இ ஜங்க்வி, தெஹ்ரீ இ தலிபான், ஜெய்ஸ் இ முகமது மற்றும் ஷியா முஸ்லிம் இயக்கங்களான தெஹ்ரீ இ ஜாப்ரியா, ஷிபா இ முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களில் உள்ள 109 தீவிரவாதிகளின் பெயர்களை தேடப்படும் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் 50 சதவீதம் போதைக்கு அடிமை. ஓர் அதிர்ச்சி ஆய்வு.


28  February  2013    
www.thedipaar.com

பணிச்சுமை, வயதாகியும் திருமணம் ஆகாதாதது, தனிமை, மன அழுத்தம், தவறான வழிகாட்டுதல் போன்ற காரணங்களால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, கெஸ்ட் ஹவுஸ் என்று சுற்றுகின்றனர். ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் 50 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகை போதை பொருளை பயன்படுத்தி வருகின்றனர் என்று சர்வதேச போதை ஒழிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்த் ஏறிய படியில் கிடந்த கத்தி. திண்டுக்கல்லில் பரபரப்பு.


01  March  2013   
www.thedipaar.comஅவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரானார். அவர் இறங்கி வந்த படிக்கட்டில்,கத்தி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில், கடந்த, ஆக., 1ம்தேதி, தே.மு.தி.க., சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் ஜெயபாலன், திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், நேற்று ஆஜராகும்படி, விஜயகாந்த்க்கு, மாவட்ட நீதிபதி பால சுந்தரகுமார் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, விஜயகாந்த் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

ராமேசுவரத்தில் தண்ணீர் லாரி மோதி மீனவர் பரிதாப சாவு


ராமேசுவரம், பிப்.

ராமேசுவரம் ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது42), மீனவர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் கடை தெருவுக்கு சென்றார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றி வந்த லாரி ஒன்று சேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சேகர் தூக்கி வீசப்பட்டார்.

ரஷ்யாவில் விண்கல்லின் பெரிய பாகம் கண்டுபிடிப்பு

 பெப்ரவரி 2013,
ரஷ்யாவின் யூரல் மலைக்கு மேலாகப் பறந்து வந்து உறைந்த செபார்க்குல் ஏரிக்குள் மோதிய விண்கல்லின் பெரிய பாகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நாயுடன் உறவு கொண்ட பெண் கைது

[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 
அமெரிக்காவில் காரா வான்டெரயக் என்ற இளம்பெண் திறந்தவெளியில் நாயுடன் உல்லாசம் அனுபவித்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மையப்பகுதியிலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும்: வடகொரியா

[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 
வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக உள்ள நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் நோக்கில் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவது, அணுகுண்டு வீசப்பட்டால் அமெரிக்கா எப்படி தீப்பிடித்து எரியும், இதுபோன்ற காணொளிகளை உருவாக்கி அமெரிக்காவை வடகொரியா சமீபகாலங்களாக மிரட்டி வருகின்றது

Wednesday 27 February 2013

ஐ.நாவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார் பின்லேடன்!


ஐ.நாவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார் பின்லேடன்!


February 28, 2013  09:47 am
அல்,கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஐ.நா. நீக்கியுள்ளது.

இருப்பினும், பின்லேடனின் சொத்துகள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த விடாமல் முட க்கி வைக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து மேற்கொள்ளும்.

பின்லேடன் கொல்லப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை தற்போது ஐ.நா. நீக்கியுள்ளது. அல்,கொய்தாவினருக்கு ஐ.நா. விதித்துள்ள தடை பட்டியலில் இப்போதும் 233 தீவிரவாதிகள், 63 அமைப்புகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் உள்ளன.

thamilan. thanks

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?'' கமல்ஹாசனைச் சீண்டும் சீமான்


 February  2013    
திரைத் துறை ஒரு சமூகப் பார்வை’ என்னும் தலைப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சமீபத்தில் சென்னையில் நடத்திய கருத்தரங்கம், சமூகப் பொறுப்புடன் திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. 
கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்த பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், '' 1992-ம் ஆண்டுக்குப் பிறகு, முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்திரிக்கிறது தமிழ் சினிமா. சமூகத்தில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் முஸ்லிம்களின் அடையாளத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதைப் போக்க கலையுலகம் முயற்சிக்க  வேண்டும்'' என்றார்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் ! நிமல்கா பெர்னாண்டோ

28  February  2013  09:33:56 AM    
www.thedipaar.com
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்கும் யுத்தக் குற்றத்திற்குமாக இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.

மதகாஸ்கர் நாட்டில் வீசிய புயலுக்கு 23 பேர் பலி


மதகாஸ்கர் நாட்டில் வீசிய புயலுக்கு 23 பேர் பலி

February 27, 2013  02:35 pm

இந்தியப்பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில், ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ளது மதகாஸ்கர் நாடு. இங்கு ஹருனா என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பலத்த மழையுடன் தாக்கியது. 

சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலுக்கு 23 பேர் உயிரிழந்தனர்.  16 பெரை காணவில்லை. 23,000 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வெள்ளியிலிருந்து 2 முறை வீசிய இந்த சூறாவளிக்கு 1,500 வீடுகள் சேதமடைந்தன. 6,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

பெண்களை கற்பழித்து கொன்று நரமாமிசம் தின்ற பொலிஸ் - திடுக்கிடும் தகவல்


பெண்களை கற்பழித்து கொன்று நரமாமிசம் தின்ற பொலிஸ் - திடுக்கிடும் தகவல்
February 27, 2013  02:39 pm
அமெரிக்காவில் பெண் களை கற்பழித்து கொன்று அவர்களின் நரமாமிசத்தை போலீஸ் அதிகாரி தின்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி



பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி
பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி
கோலாலம்பூர், பிப்-26
நேற்று 25 பிப்ரவரி 2013 திங்கள் கிழமை தடபுடலாக பக்காத்தான் ராக்யாட் அரசியல் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த 13ஆவது பொதுதேர்தலுக்கான கொள்கை விளக்க கூட்டத்தில்  இந்திய சமூகத்திற்கு  அம்போ என்று கை விரித்து விட்டார்கள், என ஹிண்ட்ராப்பின் துணைத் தலைவர் வி.சம்புலிங்கம் பரபரப்பான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பக்காத்தான் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை- அன்வார் உத்தரவாதம்



பக்காத்தான்  அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை- அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர்,பிப்-26
இந்தியர்கள் உள்பட எந்தச் சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். 10 வாக்குறுதிகளின் ஒன்றான கல்வியை அடுத்துக்காட்டாக கூறிய அவர், சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் மிஷனரி பள்ளிகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்றார். பக்காத்தான் கொள்கை விளக்க அறிக்கையில் இந்திய சமூகத்துக்கென தனிக்கொள்கைகள் குறிப்பிடப்படாதது ஏன் என்று கேட்டதற்கு அன்வார் இவ்வாறு விளக்கினார்.

ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!


ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!


ஏர் பலூன் வெடித்து சுற்றுலா பயணிகள் 19 பேர் பலி!
எகிப்து:   சுற்றுலா பயணிகளை சுமந்து கொண்டு விண்ணில் பறந்து சென்ற ஏர் பலூன் வெடித்து 19 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் எகிப்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday 26 February 2013

பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம்!




 பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம்!புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மார்ச் 26, 27-ம் தேதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்குபெற செல்லும்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் செல்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில்  முதல்முறையாக இந்தியப் பிரதமர்     ஒருவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார். இதற்கு முன் கடந்த 1981-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.


.inneram. thanks

கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சீனாவின் அதி நவீன இரகசியப் போர்க்கப்பல்.

[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 01:35.52 மு.ப GMT ]
சீனா, கிழக்கு மற்றும் தென் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கப்பற்படையை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக நேற்று புதிய ரகசிய போர்க்கப்பல் ஒன்றை கப்பற்படைக்கு அறிமுகப்படுத்தியது.

சேது சமுத்திரம்:தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க மாநிலங்களவையில் அமளி!



புதுடெல்லி:சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரி மாநிலங்களவையில் மதத்தின் பெயரால் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபோது திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்குரல் எழுப்பினார்.
இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, மாநிலங்களவை நண்பகலுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவையை மூத்த உறுப்பினரான இ.எம்.எஸ். சுதர்சன நாச்சியப்பன் வழிநடத்தினார்.

ரெயில்வே பட்ஜெட்:பயணிகள் கட்டணம் மறைமுகமாக உயர்வு! விலைவாசி உயரும் அபாயம்!



புதுடெல்லி:பாராளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் 5.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது; எனினும் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறினாலும் முன்பதிவு, டிக்கெட்டை ரத்துச் செய்வது, தட்கல் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். கடந்த 17 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை.

தனி திபெத் வேண்டும் - 106 பேர் தீக்குளிப்பு



தனி திபெத் வேண்டும் - 106 பேர்  தீக்குளிப்பு

February , 2013  
சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத்தை விடுவித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திபெத்திய லாமாக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் கழுதை மாமிசம் கலப்பு


 தென் ஆப்பிரிக்காவில் கழுதை மாமிசம் கலப்புFebruary 27, 2013  08:10 am
இறைச்சியில் குதிரை மாமிசம் கலக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பாவில் பல இடங்களில் புகார் எழுந்துள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் விற்கப்படும் இறைச்சிப் பொருட்களில் - அதில் கூறப்பட்டிருக்காத - எருமை, வெள்ளாடு மற்றும் கழுதைகளின் மாமிசம் கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மகளிர் காங்கிரஸ் தலைவியை பி.ஜே.குரியனுடன் இணைத்து பேஸ் புக்கில் ஆபாச கருத்து. போலீஸ் விசாரணை


  February  2013    
www.thedipaar.comடெல்லி மேல்–சபை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுடன் கேரளா மாநில மகிளா காங்கிரஸ் தலைவியை இணைத்து ஆபாச கருத்தும், அவரது படமும் இணைய தளத்தில் வெளியானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள் - லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது


27  February  2013  07:09:22 AM  படித்தவர்கள்: 1
www.thedipaar.com
இலங்கை இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்திரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

உற்பத்தி திறனில் பின் தங்கும் மலேசியர்கள்



உற்பத்தி திறனில் பின் தங்கும் மலேசியர்கள்


நம்மில் பலரும் தினமும் அலுவலகத்தில் பலமணிநேரங்களை செலவழிப்பதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், அந்த பலமணிநேரங்களில் எவ்வளவு நேரம் நாம் பணியிட உற்பத்திக்காக பங்காற்றுகிறோம் என ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Monday 25 February 2013

பிளாஸ்டிக் கழிவினால் எரிபொருள் தயாரித்து விமானம் ஓட்டத் திட்டம்



பிளாஸ்டிக் கழிவினால் எரிபொருள் தயாரித்து விமானம் ஓட்டத் திட்டம்February 26, 2013  09:46 am
இலண்டனில் பிறந்து அவுஸ்திரேவியாவில் வாழும் விமானி ஒருவர் பிளாஸ்டிக் கழிவினால் தயாரிக்கப்படும் எரிபொருளைக் கொண்டு நீண்ட தூர விமானப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறார்.

ஜப்பானில் நிலநடுக்கம் - டிபுகுஷிமா அணு உலைக்கு பாதிப்பில்லை


[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013,
கிழக்கு ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள டோசிகி என்ற இடத்தை மையமாகக் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சூடானில் ஆயுதம் ஏந்திய பழங்குடியினரிடையே மோதல்: 51 பேர் பலி


தர்பர், பிப். 26-

ஆப்பிரிக்கா நாடான சூடானின் மேற்கு தர்பார் பகுதி தங்கச்சுரங்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது தொடர்பாக பானி ஹூசைன் மற்றும் ரிசைகாட் பழங்குடியினர்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

7 செயற்கை கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட். விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.


www.thedipaar.com
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது சதீஷ்தவான் விண்வெளி மையம்.இங்குள்ள  ஏவுதளத்தில் இருந்து தான் இந்திய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை அனுப்பி வருகின்றனர்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது!


=

Another Gujarat cop arrested in Ishrat encounter case
அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காந்தி நகர் ஸ்பெஷல் ஆபரேசன் க்ரூப்(எஸ்.ஏ.ஜி)  சப் இன்ஸ்பெக்டர் பரத் பட்டேலை சி.பி.ஐ கைது செய்தது. பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!


குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

ஹைதராபாத்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் இன்று பதவியேற்றார்!


on 25 February 2013.

தென்கொரியா அதிபர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே-வை தோற்கடித்து பார்க் கியூன்-ஹே (61) என்ற பெண்மணி வெற்றி பெற்றார். அதனையடுத்து, அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் Park Geun-hye, தென் கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார்.

83 மில்லியன் ஆண்டுகள் வரலாற்றுக்கு முந்தைய சிறிய கண்டம் கண்டுபிடிப்பு!



on 25 February 2013.
இந்தியாவிலிருந்து மதகாஸ்கர் நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 முதல் 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா (Mauritia) என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு சிறிய கண்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப்பெருங்கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில்...

Sunday 24 February 2013

பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்


வறுத்தெடுக்கும் வட்டி


கொடுத்தவன் உள்ளம்

சூரிய ஒளி மின்சாரம்


ஐ.நா. உதவியுடன் டி.ஆர். காங்கோ - தீவிரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றம்


[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 01:15.32 மு.ப GMT ]
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டி.ஆர். காங்கோ இயற்கை வளம் மிக்க நாடாகும். ஜோசப் கபிலா தலைமையிலான அரசு, கிழக்குப்பகுதியை புறக்கணிக்கப்பதாக கூறி, எம்-23 தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக போராடி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? : வைகோ பதில்!




முதல்வர் ஜெயலலிதாவுடனான திடீர் சந்திப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்காக அல்ல என்று மதிமுக
பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்திய ஜோர்டானியனுக்கு சவூதியில் தலை துண்டிப்பு


ரியாத், பிப். 25-

ஜோர்டான் நாட்டை சேர்ந்த, பரிஸ் சல்மான் சலமா அல் மக்ரேபி என்பவன் தடைசெய்யப்பட்ட ’அம்பெட்டாமைன்’ என்ற போதைப்பொருளை பெருமளவில் கடத்த முயன்ற வழக்கில், சவூதியில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் கடத்திலில் ஈடுபட்டது அங்கு ஊர்சிதப்படுத்தப்பட்டது.

மாலி நாட்டில் இராணுவம் தீவிரவாதிகளிடையே மோதல்: 78 பேர் பலி


[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 03:20.54 மு.ப GMT ]
மாலி நாட்டின் வடக்கு பகுதியில், கடந்த ஆண்டு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து கொண்டனர்.

சிரியாவில் வன்முறையை தடுக்க தவறிய உலக நாடுகளின் செயல் வெட்கக்கேடானது: புரட்சிப்படை

[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 03:22.38 மு.ப GMT ]
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் உட்பட இதுவரை அங்கு 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 400 குழந்தைகளை கொன்று ஆற்றில் வீசிய பெண்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 07:12.55 மு.ப GMT ]
பிரிட்டன் தேசிய ஆவணகாப்பகம் கடந்த 1770 முதல் 1934ம் ஆண்டுகளில் நடந்த 25 லட்சம் கொடுங்குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த செய்திக்கு என்ன தலைப்பு போடுறது??


இந்த செய்திக்கு என்ன தலைப்பு போடுறது???


February 24, 2013  03:05 pm
45 வயதுப் பெண்மணி தன்னைவிட 15 வயது குறைந்த வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தார்.இதை அறிந்த அந்தப் பெண்ணின் மருமகன் தனது மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த 45வயதுப் பெண் வாலிபரை உதறினார் .இதனால் ஏமாற்றமடைந்த அந்த வாலிபர் பொலிஸ் நிலையத்தில் வந்து அப்பெண்ணை தன்னிடமி்ருந்து பிரிக்கக் கூடாது என்று கெஞ்சியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னையில் உயிரிழப்பு!



on 24 February 2013.
சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார். திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Saturday 23 February 2013

வங்கிகளாக மாறும் இந்திய அஞ்சல் துறை. தனியார்களும் களமிறங்குவதால் போட்டி அதிகரிப்பு.


24  February  2013  
www.thedipaar.comஇந்திய அஞ்சல் துறை, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வங்கி வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், குக்கிராம மக்களும் வங்கிச் சேவை வாய்ப்பை பெறுவர்

சென்னையில் மேலும் 24 இடங்களில் இன்று மலிவு விலை உணவகம் திறப்பு. மேயர் சைதை துரைச்சாமி அறிவிப்பு.


24  February  2013   
www.thedipaar.com

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி சார்பில் 15 மலிவு விலை உணவகங்களை கடந்த 19ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவொற்றியூர் மண்டலம் மணலி எக்ஸ்பிரஸ் சாலை, மணலி மண்டலம் பெருமாள் கோயில் தெரு. மாதவரம் மண்டலம் நேரு நகர் சென்னை மாநகராட்சி மிடில் பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம் புதிய வினோபா நகர் சமுதாய நலக்கூடம், புதிய வண்ணாரப்பேட்டை மல்டி பர்பசல் ஹால்.

விசாரணை பெண் கைதியை கற்பழித்த மூன்று போலீஸ்காரர்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண் போலீஸ்.

.

24  February  2013   
www.thedipaar.comவிசாரணை கைதியை, பாலியல் பலாத்காரம் செய்த மூன்று போலீசாரும், உடந்தையாக இருந்த இரு பெண் போலீசாரும், "சஸ்பெண்ட்' செய்யபட்டனர்.