Appakutty sahab
PUDUVALASAI .NET
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday 21 April 2024
Friday 12 April 2024
எங்களது ஊரில் கால் பந்து பெருமை சேர்த்த 💐💐💐💐💐💐
புதுவலசையில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு களைகட்டும் அதே போல் கால்பந்தும்.
பொதுவாக நமதூர் மக்கள் கால்பந்து நன்றாக விளையாடும் திறமை உள்ளவர்கள். அதுவும் 80' களின் கடைசி ஒரு பொற்காலம் என்று சொல்லலாம் கால்பந்து மீது ஆர்வம் இருந்தாலும் அதை மேலும் அதிகமாகியது என்றால் அது "ஷேக் அமானுதீன் அண்ணன்," காரணம் அவர்கள் ஆடும் முறை.
"மலேசியாவில் இருந்து அவர்கள் ஊருக்கு வந்தாலே கிரவுண்ட் களைகட்டும்" 4:45 க்கு மைதானத்தில் இருந்தால் மட்டுமே விளையாட முடியும் அதன் பின் வந்தால் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது. அவருடன் விளையாட எல்லோருக்கும் ஆசை இருக்கும் அது பல வீரர்களை அடையாளம் காண உதவியது.
"இன்று மெஸ்ஸி,ரெனால்டினோ என்று நாம் வியர்ந்து பாருக்கும் வீரர்கள் போல் அவர் விளையாடும் முறையும் தனியாக தெரியும்." அவரி வேகத்திற்கு யாராலும் ஓட முடியாது அந்த வேகம் பலரையும் ஈர்த்தது, விளையாடுவது மட்டும் அல்ல பந்தை எவ்வாறு நெஞ்சில் வாங்க வேண்டும் பந்தை வேகமாக அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றவர்கள் அதிகம்.
விளையாட ஊரே திரண்டு வெளியூர் போவதும் மற்ற ஊர் அணிகள் ஊரில் விளையாட வருவதும் கால்பந்து திருவிழா.
அவர் விளையாடுவது அழகாக, நேர்த்தியாக இருக்கும். அதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை அந்த கால கட்டத்தில் அவர்களோடு விளையாடியவர்களுக்கு அதை ரசித்தவர்களுக்கு இந்த கருத்தில் மாற்று கருத்து இருக்காது.
"அந்த காலகட்டத்தில் கால்பந்து விளையாடுபவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேசன்." புதுவலசையின் கிரேட் கால்பந்து வீரர் அண்ணன் ஷேக் அமானுதீன் அவர்கள்.
Tuesday 31 October 2023
படித்ததில் பிடித்தவை
நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது...
என் மனைவி )...
ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாகக் கூர்ந்துப் பார்க்கிறேன்...
இத்தனை வருட வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்...
என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்..
விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில்
தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்...
வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்...
எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசி அறியாமலே புசித்திருக்கிறேன்...
கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்...
திருப்பி ஒரு நாளேனும் என்னைத் திட்டியதில்லை அவள்...
திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ..
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்...
மெதுவாக அவள் கைகளை எடுத்து
என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்..
கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர் வலிக்கிறது கைப்பட்டதால் அல்ல.. .
மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து...
எங்கே இருந்தேன் இத்தனை நாளும்
என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்...
பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னைத் தூங்க விடவில்லை நான் பின் நான் பெற்றதுகளும்
உன் நாத்தனார்களும்...
செல்வமே அத்தனைச் சொத்துக்கள் சேர்த்த எனக்கு... எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்...
இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ நாங்கள் அத்தனை பேரிருந்தும்
உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவள் நீ
எப்படி மறந்தேன் உன்னை...
நானில்லாத போதும்
நீ தைரியமாக கடந்து விடுவாய்
உன் இறுதி நாட்களை
நீயில்லாமல் என் வாழ்க்கை
நினைத்தும் பார்க்க முடியவில்லை
என்னால்...
தீர்க்கச் சுமங்கலியாகி
நீ முந்திக் கொண்டால்
ஊரே போற்றும் உன்னை...
உன்னைத் தொலைத்து விட்டு
நானிருந்தாலோ
ஏறெடுத்தும் பாரார் என்னை
நீ இருக்கும் வரையில் தான்
என் திமிரெல்லாம்...
நான் சத்தியமாகச் சொல்கிறேன்
நீ மட்டும் போதுமடி எனக்கு
உன்னை விட எதுவும்
என்னை ஈர்க்காது இனிமேல்..
சாகும் வரையில் உன் காலடி போதும்
உன் மார்போடு என்னை அணைத்து ஒரு தாலாட்டு போதும்...
கதையின் நீதி :-
வெறும் உடலால் இணைபவர்கள்
கணவன் மனைவி அல்ல...
ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி
இந்த பதிவு பேஸ்புக்கில் எடுத்தவை
Thursday 26 October 2023
*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு**தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..**1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.* *2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.**3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.* *4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.**5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.**இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..**முதலமைச்சர் தனி பிரிவு - எண்* 044 25672345, 044 25672283*முதலமைச்சர் - எண்*+91 9443146857*தொலைநகல் - எண்*044 25670930, 044 25671441*பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.*
Wednesday 25 October 2023
மரணம் அறிவித்தல்
தேதி:-(26/10/2023)
அஸ்ஸலாமு அலைக்கும் நமதூர் ஜமாத்தை சேர்ந்த தங்க தராசு வீட்டு மர்ஹூம் அபுத்தாலிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அலி அக்பர் அவர்களின் மனைவியும் (சிக்கலார்) என்ற செய்யது இபுராஹிம் மற்றும் ஹாஜா மைதீன் ஆகியோரின் மாமியாருமான உசைனா பீவி அவர்கள் வஃபாத்தாஹிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸாவின் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணியளவில் நமதூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரியபடுத்திக்கொள்கின்றோம்
புதுவலசை ஜமாத் தங்களின் கடமையை உணர்ந்து ஊர் பொதுமக்களையும், மக்களின் உடமைகளையும் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக நமது ஊருக்குள் நடந்து கொண்டிருக்கும் சிறு சிறு திருட்டுகளை, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் போனால் பெரிய திருட்டுக்கு வழிவகை செய்யும் மற்றும் பெரும் ஆபத்துகளையும் விலைவிக்கக் கூடியதாக இருக்கும்.
நமது ஊருக்குள் தொடர்ச்சியாக நடைபெற்ற திருட்டுக்கள்:
சேகு அமானுதீன் சார் வீட்டில் 20 ஜோடி புறாக்கள்,
பாம்பாட்டி அவர்களது தோப்பில் இஞ்சின் மோட்டார்,
சகோதரர் பாஷில் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் திருட மேற்கொண்டு முடியாததால் இரும்பு பொருட்களை திருடி சென்றது.
சகோதரர் சிக்கந்தர் ஷா தோப்பில் மோட்டர் திருடியது, சகோதரர் அபுரார் அவர்கள் தோப்பில் மோட்டர் திருடியது மற்றும் தற்போதைய சைக்கிள் திருட்டு என தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இது நமக்கு தெரிந்த திருட்டுக்கள். வெளியில் தெரியாமல் எத்தனை திருட்டுக்களோ?
நமதூரில் முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஏதேனும் அசம்பாவிதமோ?, திருட்டோ அல்லது திருடன் நடமாட்டமோ இருந்தால் உடனடியாக ஜமாஅத் மற்றும் சங்கம் தலையிட்டு அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக, விரும்பத்தகாத சில விசயங்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டோ அல்லது எதார்த்தமாகவா என்று தெரியவில்லை ஆனால் நடைபெறுகின்றது.
ஜமாஅத்தும், நிர்வாகிகளும் நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்ப்பது போல் உணர்கின்றோம். இது ஊருக்கும், ஊரின் பாதுகாப்பிற்கும், ஊரில் மக்களுக்கும் நல்லதல்ல.
திருமணத்திற்கு செல்வது, கொடியேற்றுவது, விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என ஜமாஅத் செயல்பாடுகள் குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி, ஜமாஅத்தின் கடமைகளை செய்வதிலிருந்து தூரமாகிவிட்டதோ? என்று எண்ண தோன்றுகிறது.
இந்த நிலை தொடர்வது ஊருக்கும், ஊரின் வளர்சிக்கும் நல்லதல்ல.
கூடுதலாக பொது தளத்தில் எழுதுவது உகந்ததல்ல என்பதால், இதை சுருக்கமாக குறிப்பிடுகின்றேன். இந்த நிலை உணர்ந்து ஜமாஅத்தும், சங்கமும் செய்லபட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
களத்திற்கு வரமுடியாது, காவல் நிலையம் செல்ல அச்சமாக இருக்கின்றது, ஊரில் இருக்கும் பொது சொத்தை அந்நியர்கள் ஆட்டையை போட முற்படும் போது அமைதியாக கடந்து போய்விடலாம், நமக்கேன் வம்பு என்று நினைப்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அது தான் ஊரின் சாபகேடு.
ஊரின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை. இருந்து கொண்டு தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள்.
நம்மை சுற்றிலும் நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி கொண்டு செயல்படும், தைரியமிக்க அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி நடக்க கூடிய நிர்வாகத்தை தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.
எது நடந்தாலும் தனி நபர் பார்த்து கொள்வார் என்றால் ஜமாஅத் நடவடிக்கைகள் கேள்வி குறியாகிவிடும்.
புதுவலசை ஜமாத் தங்களின் கடமையை உணர்ந்து ஊர் பொதுமக்களையும், மக்களின் உடமைகளையும் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக எந்த உதவிகள் வேண்டுமாலும் என்னை போல் பலரும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
ஊரின் பாதுகாப்பும், வளர்ச்சியும் மிக மிக அவசியம். ஒரு சிலரின் அலட்சிய போக்கால் அதை இழந்து விட்டு நிற்க தயாரில்லை என்பதை இதன் மூலம் தெரியபடுத்தி கொள்கின்றேன்.
அன்புடனும், உரிமையுடனும் கூறி கொள்கின்றேன்.
இப்படிக்கு
பைசல்
இதே போன்று ஊருக்குள் கஞ்சாவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகவும் தகவல் வருகின்றது. மிக ஆபத்தான அனைத்து பாவங்களுக்கும் வழிவகுக்கும் கஞ்சாவை ஊருக்குள் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் கடும் எதிர்ப்பை காட்ட வேண்டும், தகுந்த நடவடிக்கையின் மூல அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பல அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும். மிகவும் எச்சரிக்கையாகவும், தைரியமாகவும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். கைமீறி சென்றதன் பின் கட்டுபடுத்த முடியாமல் கைபிசைந்து நிற்பது நமக்கும், ஊருக்கும் பேரிழப்பாகும்.
இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து ஊருக்குள் வந்து பல வீடுகளுக்கு பால் விற்பனை செய்கிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் ஊரின் தெருக்களில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளின் சர்வ சாதாரணமாக யாரோ ஒருவன் ஊர் முழுவதும் சென்று வருகின்றான் சில நேரங்களில் 20-25 வயது இளைஞர்கள் பால் ஊற்றுகின்றேன் என்று வந்து போகிறார்கள். இவை கண்கானிக்கப்பட வேண்டும். 6 மணிக்கு மேல் ஊருக்குள் உனக்கு என்ன வேலை என்ற கேள்வியுடன் வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமதூரில் இருந்த கட்டுப்பாடுகள் இன்று இல்லாமல் போனதன் காரணம் தெரியவில்லை.
ஆனால் மீண்டும் அந்த கட்டுபாடுகளுக்கு உயிர் கொடுக்கப்பட வேண்டும். இன்னும் ஏராளமான நிகழ்வுகள். அவை நம் போன்றவர்களின் முயற்சிகளால் சரி செய்யப்பட வேண்டும்.
நமக்கேன் வம்பு எங்கோ தானே எரிகிறது என்று கடந்து சென்றால் ஒரு நாள் அந்த நெருப்பு நம்மையும், நம் சார்ந்தவர்களையும் பொசுக்கி விடும்.
சிலருக்கு நான் வேலை இல்லாமல் எழுதுகின்றேன் என்று தோன்றலாம். சிலருக்கு விளையாட்டாக இருக்கலாம். சிலர் காலம் முழுவதும் வேடிக்கை பார்பவர்களாக மட்டும் இருக்கலாம்.
*ஆனால் மிக சிலருக்கு என் எழுத்தின் ஆழமும், கருத்தின் தாக்கமும் புரியும். அந்த வெகு சிலர் இந்த கருத்துகளை உள்வாங்கி செயல்பட்டார்கள், செய்ல்படுகிறார்கள், செயல்படுவார்கள்*
அமைதியான முறையில் இது போன்ற விரும்பதகாத செயல்வாடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே நமது எண்ணம்.
புரிபவர்களுக்கு புரியும்…
பார்வையாளர்களாக மட்டுமே படித்து விட்டு கடந்து போகாமல், நம்மால் ஆன நல்லதை ஊருக்காக செய்ய முற்படுவோம்.
நாம் முன் பின்பற்றிய ஊர் கட்டுப்பாடு வழிமுறையை இன்று பிரசமூகம் பின் பற்றிகிறது முன்னேறுகிறது. நாம் அதை விட்டதன் வெளிப்பாடு சமூக சீர்கேடு நோக்கி பயணிக்கின்றது. ஊர் கட்டுப்பாடு மூலம் வளமான சமூகத்தை கட்ட அமைப்பது காலத்தின் கட்டாயம்
Subscribe to:
Posts (Atom)