சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஜெ., இன்று ஜாமினில் விடுதலை ஆனார். கோர்ட் உத்தரவு அளித்தபின்னர் அவர் முறைப்படி பரப்பர அக்ரஹார சிறையில இருந்து மதியம் 3 மணி 16 நிமிட நேரத்தில் வெளியேறினார்.
இவர் சிறை வளாகத்தில இருந்து கார் மூலம் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள எச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு செல்கிறார். இங்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜெ., சசிகலா, மற்றும் இளவரசி, ஒரே காரில் வந்தனர். இவர்களை படமெடுக்க பல்வேறு பத்திரிகையாளர்கள் ஜெயில் வளாகத்தில் காமிராக்களுடன் காந்திருந்தனர்.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் சனிக்கிழமை, ஜாமினில் வெளியே வந்ததும் சனிக்கிழமை ஆகும். கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் திகதி ( சனிக்கிழமை ) சிறப்பு கோர்ட் ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கு சிறைத்தண்டனை அறிவித்தது.