அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 30 March 2023

உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது! நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை!உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது!எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது!வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம்!நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்!அதற்கும் இறைவன் அருள் வேண்டும்!செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்!நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்! ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ!ஆகவே, உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள்!மனசாட்சியுடனும் நேர்மை உணர்வுடனும் சுவாசியுங்கள்!அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி! சத்தியமான மன நிம்மதி!நன்றி: Sakthi Sri

Tuesday 28 March 2023

சேது பொறியியல் கல்லூரின் சிறப்பு இப்தார் விருந்து துபாயில் உள்ள லாவண்டர் ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு CBSE- பள்ளிகளின் முதல்வர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், முன்னால் சேது கல்லூரியின் மாணவர்கள் மற்றும் The Rise Global அமைப்பின் அமீரக நிர்வாகிகள் என பல நல் உள்ளங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கல்லூரியின் சிறப்பு குறித்தும், இம்மாபெரும் நிறுவணத்தின் Founder ஜலீல் சாஹிப் குறித்தும் பல்வேறு விசயங்களை சிறப்பு விருந்தினர்கள் பகிர்ந்து கொண்டனர்.Sethu Institute Of Technology-தனது கல்வி பணியை அமீரகத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் இலகுவாக அடைந்து கொள்ளும் அடிப்படையில் தமிழகத்தில், மதுரையில்; உலக தரம் வாய்ந்த சகல வசதிகளுடன் கல்லூரி படிப்பை தொடரும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது. சேது நிறுவனமும், அதன் ஸ்தாபகரும் மென் மேலும் வளர இறையருள் பெருகட்டுமாக!!ஆமீன்!!

*நலஉறவுகளே இனிய வணக்கம்.**இன்றைய நலத்தகவல்..!**மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்...*கோடை காலத்தில் மண் பானைகள் எங்கும் விற்பனைக்கு வருவதை பார்க்கிறோம்.*குளிர்ந்த தண்ணீர் விரும்பும் சாமானியர்களுக்கும் மண்பானைகள் ஏற்றது.*இந்த மண் பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி,*பல மருத்துவ குணங்களும் கொண்டது*பழங்காலத்திலிருந்தே, நம் முன்னோர்கள் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கு மண் பானைகளைப் பயன்படுத்தினர்,முதன்மையாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களை தயாரிக்க மண் பானைகள் பயன்படுத்தப்பட்டன,குளிர்சாதனப் பெட்டி தண்ணீர் ஆரோக்கியமற்றது. இது உங்கள் தாகத்தையும் தணிக்காது.எனவே, *இப்போது பலர் குளிர்ந்த நீருக்கு மண் பானைகளைப் பயன்படுத்துகின்றனர்.* மண் பானைநீர் தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, *உடலின் பல நோய்களைக் குணப்படுத்தும். உங்கள் உடலுக்கு நல்லது.**மண் பானையில் உள்ள நீர் இயற்கையாகவே உடலைக் குளிர்விக்கும்.*கோடையில் நீரிழப்பு மற்றும் நீர் இழப்பைத் தடுக்கிறது. இது உடலில் நோயை உண்டாக்கும் *மூன்று தோஷங்களை வாத, பிதாமம் மற்றும் கபம், சமன் செய்கிறது:*“கோடையில் மண் பானை தண்ணீரைக் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள், அந்த நீரில் வெட்டிவேர், எலுமிச்சை ஆகியவற்றைச் சுவைக்காகவும்,நறுமணத்திற்காகவும் போடுவார்கள். இவை தவிர, ஒரு கைப்பிடி அளவு தேற்றான் கொட்டையை சுத்தமான வெள்ளைத் துணியால் கட்ட வேண்டும். இந்த வகை காய் கண்ணுக்குத் தெரியாததை அழிக்கிறது. நுண்ணுயிரிகள் மற்றும் தண்ணீரை சுத்திகரிக்கின்றன.வாரத்திற்கு ஒருமுறை அல்லது தண்ணீரை மாற்றும் போதுபுதிய தேற்றான் கொட்டையை சேர்க்கவும்.குளிர்ந்த நீருக்கு மண் பானைகளைப் பயன்படுத்துபவர்கள் நாகரீகம் என்ற பெயரில் பெயிண்ட் அடிக்கிறார்கள்.பானையின் உட்புறத்தில் சிலவற்றையும் வண்ணம் தீட்டவும். இதைச் செய்யும்போது அழகாகத் தோன்றலாம்.இருப்பினும், ஒரு வண்ணம் பானை இதற்கு உதவாது. மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறிய துளைகளும்தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன.மண் பானைகளில் உள்ள நீரால் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கிறது.மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும்.*மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வாட்டர் பில்டர்’.*தினமும் மண்பானைத் தண்ணீர் குடிப்பதால்நம் உடலில் வெப்பத் தன்மை குறைகின்றது.🌿🌺*

Sunday 26 March 2023

டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் (பி. 1942)தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர்!அரசு தர முன்வந்த எந்தச் சலுகையையும் ஏற்காதவர்! காஜி பொறுப்புக்காக அரசிடமிருந்து எந்த ஊதியத்தையும் பெறாதவர்! திருமண சான்றிதழ், மார்க்கச் சட்ட விளக்கங்கள் கேட்டு வரும் மக்களுக்கு பள்ளிவாசல் திண்ணையிலிருந்தே தனது பணியை இன்றுவரை நிறைவேற்றிவருபவர்!இதுவரை லட்சக்கணக்கான சான்றிதழ்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்! எவரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை!அரசு பல முறை அவரது குடும்பப் பள்ளிவாசலையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் மேம்படுத்த முன்வந்தபோதேல்லாம் வேண்டாமெனத் தவிர்த்தவர்!டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அவர்கள் புகழ்பெற்ற ‘நாயித்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்!இவரது குடும்பம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தது என்றும் நபித்தோழர்கள் பரம்பரையைச் சேர்ந்தது என்றும் சொல்லப்படுகின்றது!இவரது குடும்பத்தைச் சேர்ந்த மார்க்க மேதைகள் நவாப்கள் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டே அரசு காஜிகளாக பொறுப்பு வகித்து வருகிறார்கள்! டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அவர்கள் இக்குடும்பத்தின் 19 ஆவது காஜி ஆவார்!புகழ்பெற்ற மார்க்கமேதை காஜி பத்ருத் தவ்லா ‘நாயித்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!இறையச்சம், மார்க்க ஞானம், நேர்மை, எளிமை ஆகியவை டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அவர்களின் மிகச்சிறந்த பண்புகள்!சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஃப்சலுல் உலமா, M.Phil., Ph.D. பட்டங்கள் பெற்றவர்!ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரபுத்துறையில் M.A. பட்டம் பெற்றவர்!புகழ்பெற்ற எகிப்து அல்அஸ்கர் பல்கலைக் கழகத்தில் நான்காண்டுகள் மார்க்கப் பிரிவில் உயர்நிலை பட்டம் பயின்றவர்கள்!அரபு, உருது, ஆங்கிலம், தமிழ், பாரசீகம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமைப் பெற்றவர்கள்!சென்னை, புதுக்கல்லூரி அரபுத்துறையில் 1983 முதல் 2000 வரை அரபுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்கள்!தனது 81ஆவது வயதிலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சமூக அக்கறையுடன் சேவையாற்றும் மகத்தான மனிதர் டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப்! தமிழ் நாடு கண்ட உயர்ந்த மனிதர்களுள் இவர்களும் ஒருவர்!எவரையும்திட்டாதீர்கள்!நல்லவர்களைத் திட்டவே திட்டாதீர்கள்!எச்சரிக்கையாய் இருங்கள்... இறைகோபத்திடம்!Written by : நேசமுள்ள சகோதரர், DrJahir Husain Jamia Madras உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர், பன்மொழிப் புலவர், இறை அழைப்பாளர், பன்னூல் ஆசிரியர் டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள்... காஜி சாகிபின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்!

Saturday 25 March 2023

உங்கள் வாழ்க்கையில்,
வார்த்தை என்பது,
ஏணி படி போல,
சில நேரங்களில்,
அது உங்களை,
ஏற்றி விடும்,
பல நேரங்களில்,
அது இறக்கியும் விடும்,
நீங்கள் உபயோகிப்பதை,
பொறுத்து என்றும்..😊🌷

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

 dr. ஃபஜிலா ஆசாத்சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

 

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

 

எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும்அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது அல்லது யாராவது வந்து நிற்கிறார்கள்என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுஏன் எனக்கு மட்டும் மகிழ்ச்சி என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே இருக்கிறது?.

கலகலன்னு இருக்கிற கடை வீதியிலே ஒரு பத்து பேரை பார்த்து, ”உங்களுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க விருப்பமாஇல்லை சோகமா இருக்க விருப்பமா” ன்னு சும்மா கேட்டுப் பாருங்க.

    நிச்சயமாவாழ்க்கையிலே யாராவது சோகமா இருக்க விரும்புவாங்களாசந்தோஷமாக இருக்கத் தான் விருப்பம்னு எல்லோரும் சொல்லுவார்கள்நீங்க உடனேஎப்பவும்எல்லோரும் சந்தோஷமா இருக்கிறீங்களான்னு கேட்டுப் பாருங்கள்… உடன் பாதிக்கு மேற்பட்டவர்களின் தலை கவிழ்ந்து விடும்.

நாம எல்லாருமே வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கனும்னு தான் ஆசைப் படுகிறோம்ஆனாஏன் நம்மாலே எப்பவும் அப்படி இருக்க முடியலை.. ஏன்னாஎன் வாழ்க்கைஎன் மகிழ்ச்சி என்னை மட்டும் சார்ந்தது இல்லைன்னு நாம பிடிவாதமா நம்புகிறோம்நாம் எவ்வளவு தான் சந்தோஷிக்க ஆசைப் பட்டாலும்நம் சுற்றம்நட்புசுற்றுச் சுழல்இப்படி பல விஷயங்கள்நாம் அறிந்தும் அறியாமலும் நம்மை அதது போக்கிலே இழுத்துட்டுப் போக அனுமதித்து விடுகிறோம்.

பணம்ஆரோக்யம்வேலைபுகழ்அந்தஸ்துநிம்மதி இப்படி ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் மகிழ்ச்சியைத் தேடிஅலைந்துஒன்றல்ல இரண்டல்ல, “79” சதவீத மக்கள் மகிழ்ச்சியற்றுத் தவிக்கிறார்கள் என்கிறது ஆசியா மாகாணத்தில் நடந்த ஆய்வு ஒன்று.

புரிந்து கொள்ளுங்கள்மகிழ்ச்சி என்பது பலூன் இல்லையார் வேண்டுமானாலும்எது வேண்டுமானாலும் உடைத்து விட்டுப் போகிறதற்குமகிழ்ச்சி என்பது நம்மோடு இயைந்துநம்மை இயக்கிக் கொண்டு எப்போதும் நம் கூடவே இருக்க வேண்டிய நம் முச்சுக் காற்று.

நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்… ஏதாவது தர்ம சங்கடமான விஷயத்தைக் கேட்டாலோதர்ம சங்கடமாய் உணர்ந்தாலோநம்மையுமறியாமல்ஒரு பெரு மூச்சு விடுவோம்அல்லது நாம் முனைந்து அந்த பெரு மூச்சு விடும்போது இலகுவாக உணருவோம்.

இயற்கை நமக்கு மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் தான் வைத்திருக்கிறதுஅதனால் தான் அது குறையும் போதுமூச்சுக்கு திணறுவதாய் நமக்குப் பெரு மூச்சு வருகிறதுநாம கொஞ்சம் தெளிவாக இருந்தால்நம் பார்வை கொஞ்சம் மாறினால்எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்க முடியும்இல்லையென்றால்எந்த சூழலாலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர இயலாது என்கிறது உளவியல்.

அது ஒரு பெரிய குடும்பம்மாமாமாமிஅத்தைசித்திசித்தப்பாபிள்ளைகள்என குடும்பமே சேர்ந்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கலாமே என பல நாள் ப்ளான் பண்ணி அன்று பிக்னிக் போகிறார்கள்.

பூத்துக் குலுங்கும் மலர்களும்வண்டுகள் மொய்க்கும் பழங்களுமாய் அழகிய தோட்டம்பொங்கி வழியும் நீரில் குளித்துசில்லென்ற தென்றலில் குளிர்ந்துதேனருந்தி மகிழும் பட்டாம் பூச்சியாய் முழு நாளும் குதூகலமும்சந்தோஷமுமாக நகர்கிறது.

 விதவிதமான உணவுகள்போட்டிகள்கிண்டல்கேலிஇளசுகளோட பார்வை பறிமாற்றம்என அற்புதமாய்க் கழியும் அந்த நாளோட இறுதியிலேசிறு கல் தடுக்கி ஒரு குழந்தை விழஅது வரை தேடிய மொத்த சந்தோஷமும் அது கூடவே விழுந்து விடுகிறது.

கலகல என்று இருந்த அந்த இடமே சலசலத்துஇறுக்கமாக மாற கனத்த உள்ளத்தோடுஒருத்தரை ஒருத்தர்நிகழ்வுக்கு காரணமாய் கை காட்டஅந்த மொத்த குடும்பமும் தேடி வந்த மகிழ்ச்சியைதொலைத்து விட்டு புதிய கவலையோடு திரும்புகிறது.

இது தான் மகிழ்ச்சி என தேடிப் போன மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைத்ததாகிடைத்தால் ஏன் அவ்வளவு எளிதில் அதை தொலைத்து விட்டு மகிழ்ச்சியின்றி திரும்புகிறார்கள்?!!!.

மகிழ்ச்சியை மூச்சுக் காற்றாய் நிரப்புவதும்விரல்களை வருடிச் சென்றாலும் கைகளுக்குள் கிட்டாமல் விரலிடுக்கில் நழுவிச் செல்லும் மெல்லிய காற்றாய் விடுவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.

பொதுவாக மகிழ்ச்சியை ஒரு மூச்சுக் காற்றாய்நம் மனசிலே நாம் தேக்கி வைக்கும் போதுஒரு பற்றோடு வாழ்வோம்நாம் விரும்பியதை செய்வோம்அன்றிமகிழ்ச்சியை ஏதாவது ஒன்றில் தேடும் போதுஅதை நோக்கிய அந்த பயணத்திலேயே சோர்ந்து போய் விடுகிறோம்அல்லது அந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலே ஏதாவது ஒரு பிரச்னை வந்தாலும்அப்படியே உடைந்து போய் விடுகிறோம்முடிவில் நம்மையே நாம் இழந்தும் விடுகிறோம்.

அந்த சின்னஞ் சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள்அழகான நதிகள்மரங்கள்எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்து வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்று கொடுத்து விட்டு, அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்கஅந்த வழியே வந்த பாம்பிடம் கேட்டது.

பாம்பும், எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்பதிலுக்கு நீ உன் அழகான சிறகில் ஒன்றைத் தருவாயா?” என்றது. இன்னொரு சிறகுதானேதந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

இப்படியே அந்தக் குருவி, அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாகஅதோ…. கனவில் கண்ட அந்த அழகான உலகம், அதன் கண் முன் தெரிந்தது. வந்து விட்டோம்….. வந்தே விட்டோம்…… இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால்இதென்ன…. ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோஎன் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று திடீரென குருவி கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகளை ஏதோ ஒரு தேடலில், வழி நெடுகிலும் பிய்த்துக் கொடுத்துஎதை இழந்து கொண்டிருக்கிறோம் என்று அறியாமலேஒவ்வொன்றாக சிறுக சிறுக இழந்துஇப்போது பறக்க முடியாமல் முடமாகி போய் விட்டோம் என்ற உண்மை விளங்கியது.

இதோ, கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல், கீழே கிடக்கிறேனே என்று அந்தக் குருவி துடித்ததுஅந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும், அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பாமல் வெளியே தேடுவதால் ஏற்படும் விளைவைக் குறிக்கும் அற்புதக் கதை இது.

 

இது தான் சந்தோஷம் என்ற ஏதோ தேடலில் உண்மையில் நம்மிடம் இருக்கும் சந்தோஷங்களை  நம்மையுமறியாமலேயே இழந்து கொண்டிருக்கிறோம்…

குடும்பத்துடன் வெளியே செல்வதுபிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவதுபிடித்த புத்தகம் படிப்பதுபிடித்த படம் பார்ப்பதுபிடித்த இடங்களுக்குப் போவதுபிடித்த உடை உடுத்துவதுபிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஏதோ ஒன்றின் தேடலில்ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் நாம் மகிழ்ச்சி என்று தேடிய ஒன்று கிடைக்கும்போது, நரை கூடிதிரை வந்து, உடலும் மனசும் தளர்ந்து, எல்லாம் இருந்தும், அனுபவிக்க முடியாத நிலைக்கு பெரும்பாலும் தள்ளப் படுகிறோம்.

இது இதை செய்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்காமல்நாம் இயல்பாய் மகிழ்ச்சியாக இருந்தால் எதையும் சிறப்பாக செய்வோம்நாம் நல்ல மன நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போதுநாம் எடுக்கும் முடிவுகளும்நல்ல விதமாக நம் எதிர் காலத்தையே மகிழ்ச்சியாக வைக்கக் கூடிய வகையில் அமையும்.

 உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்றுமகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும்.

மகிழ்ந்து மகிழ்விப்போம்!!!.


ஈமெயில் நியூஸ் தேங்க்ஸ் 

அப்பாக்குட்டி சஹாப் 

Wednesday 22 March 2023

#வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது. இதில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது. இதன் தோலை மீறி எந்த ஒரு கிருமியும் உள்ளே செல்ல முடியாத பாதுகாப்பு நிறைந்த இயற்கையின் அற்புதப்படைப்பு. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை.வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மது குடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்கின்றது. நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம் பெரும்பங்கு வகிக்கிறது.வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும். கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழைப்பழம் அரு மருந்தாகத் திகழ்கிறது."வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 % குறைக்க முடிகிறது"வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம் வாழைப்பழத்தில் இருக்கக் கூடிய ஆற்றல்களை அனுபவத்தில் அறியாது அதனை உதாசீனப்படுத்துகிறோம்.

Monday 20 March 2023

காலையில் கப்று தோண்டும் போது அவருக்கு தெரியாது, இந்த கபுறில் தன்னுடைய ஜனாசா அடக்கம் செய்யப்படும் என்பது.பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் உள்ளது பழைய லெகிடி ஜமாஅத். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செய்யும் சமூக பணிகளில் கப்று தோண்டுவதும் ஒன்று. இடைப்பட்ட நாட்களில் ஊரில் யாராவது மரணித்தால் அடக்கம் செய்ய வசதியாக கப்று தோண்டி தயாராக வைப்பது வழக்கம். அதுபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் கப்று தோண்டும் பணியில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் என்பவரும் இணைந்து பணியாற்றினார். அபுதாபியில் பணியாற்றி வந்த நிசாத் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளவர் இளைஞர்களின் பணிகளை ஊக்குவிப்பவர். கப்று தோண்டும் பணி பூர்த்தி செய்து இல்லம் திரும்பிய நிசாத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வஃபாத் ஆன சோகம். காலையில் நிசாத் தோண்டிய கபுறிலேயே மாலை அவரது ஜனாசாவை அடக்கம் செய்ய வெண்டி வந்ததை அடுத்து ஊர் மக்களுக்கு தாங்கொணா துயரம். இவ்வளவுதான் வாழ்க்கை என்பது தெரியாமலேயே நாட்களை நகர்த்தி வருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Tuesday 14 March 2023

Police Report ✅ Dr Mani vs #MAMAK Restaurant Insyallah, With PRESMA & Tuan Dato AliMaju Jawahar Ali & Restaurant Owners + TamiL Muslim Society. Thank You

பாகம்

லுக்மான் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்;தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!எனதருமை மகனே!

லுக்மான் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்;
தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!

எனதருமை மகனே!
1. நீ தொழுகையில் இருந்தால்,
உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்!
2. நீ உணவில் இருந்தால்,
உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்!
3. நீ பிறர் வீட்டில் இருந்தால்,
உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்!
4. நீ மனிதர்கள் முன் இருந்தால்,
உன் நாவைப் பேணிக் கொள்!

எனதருமை மகனே!
இரு விஷயங்களை  மறந்து விடாதே!
1. அல்லாஹ்.
2. மரணம்.

எனதருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடு.
1. நீ பிறருக்கு செய்த உதவி.
2. உனக்கு பிறர் செய்த கெடுதி.

   தஃப்ஸீர் இப்னு கஸீர்.

Monday 13 March 2023



Mohammed Samsudeen 

கசப்பாயினும் உண்மை பேசு- நபி ஸல்
குலில் ஹக்க வலவ் கான முர்ரா -நபிமொழி

.சுன்னத் ஜமாத் எனக்கூறும் நம்மில் பெரும்பாலோர் ஜகாத் போன்ற கடமையான விசயத்திலும் குர்ஆன் கூறும் ஜமாத்தாக செய்வதில்லை.
நபி ஸல் வழிகாட்டிய கூட்டு ஜகாத் ( பைத்துல்மால்) மூலமும் செய்வதில்லை.
பெரும்பாலும் 
சுன்னத்தும் இல்லை.
ஜமாஅத்தும் இல்லை.
மக்களுக்கு செல்ல வேண்டிய அல்லாவின் செல்வத்தை (ஜகாத் என்பது மாலுல்லா- நபிமொழி) 
அநியாயமாக புசிப்பாதாக குர்ஆன் (9:34, 35) எச்சரித்ததை , தலைவர்கள் மற்றும் வழிகாட்டவேண்டியவர்களே சுயநலம் காரணமாக எடுத்துச் சொல்லவில்லை.
தனியாக ஜகாத் கொடுங்கள் என்று கூறுவதால் இவர்களுக்கு கிடைப்பதோ வெறும்( நோன்பு கஞ்சி & ரமலான் கவர்) 5% தான்.
இதனால் 95% ஜகாத் வீணாகி சமுதாயத்தை தொடர்ந்து இல்லாமையிலும் கல்லாமையிலும் வைத்திருக்கிறது.
ரமலான் மாதம் தொப்பி, புர்கா அணிந்து பலர் வசூல் செய்ய இது வழிவகுக்குகிறது. 
ஜகாத் ரமலானில் மட்டும் உள்ள அமல் அல்ல. நபி ஸல் 365 நாள், நாள்தோறும் 23 மணிநேரம் செய்த நற்பணி.
பசி ஒருமாதம் மட்டுமல்ல . எனவே குர்ஆன் விவசாயியின் அறுவடை  ( நிச்சயிக்கப்பட்ட சம்பளம்)அன்றே ஜகாத் செலுத்துவதை கடமையாக்கியுள்ளது.
ஆத்தூ ஹக்கஹு யவ்ம fபி ஹசாதிஹி- குர்ஆன்.

குர்ஆன், நபிவழி கூட்டு ஜகாத் & சதக்கா வேறுபாடு  சுயநலத்தால் நமக்கு ஜமாத்கள் சொல்லித்தர வில்லை
(இஸ்லாத்தை தவறாக சொன்வர்களுக்கும் கேள்வி உண்டு)

 பொருளாதார பின்னடைவால் அரசியல் ( சாதரண MC தேர்தல்வரை),& 
சமூக இலக்கை இன்று வரை சமுதாயம் அடையமுடியவில்லை.
குறைந்த அளவான பித்ரா காசை வசூலித்து பெதுமக்களுக்கு வழங்கும் சுன்னத் ஜமாத் அல்லாத அமைப்புகள் அடைந்த சிறு வெற்றி கூட பெற முடியாது, ஊர் சண்டையிலும், வரதட்சணை திருமணம் போன்ற தவறான வழிகாட்டுதலிலும்,வக்பு வாரிய பிடியிலும் சுன்னத் ஜமாத் சிக்கி தவிக்கிறது.
நபி வழி திருமணம், மற்ற அமல்களில், கடன், ஷரியத் பொருளாதாரம், கல்வி மூடநம்பிக்கை எதிப்பு போன்றவற்றில் சுன்னத் ஜமாத் தவறான வழிகாட்டுதலில் பின்னடைவில் உள்ளது.

“எந்த சமுதாயம்  அல்லா, ரசூல் காட்டிய வழி இருந்தும்,
கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற முயலவில்லையோ அந்த சமூகம் அரசியல், சமூக முன்னேற்றம் அடைய முடியாது” 

அது சுன்னத் ஜமாஅத், கட்சி, அமைப்புகளாக இருந்தாலும்.

இதற்காக நம்மில் சமுதாய வளர்ச்சி காண விரும்பும் ஒவ்வொருவரும், அகீதா வேறுபாடு ஒதுக்கி,
கல்வி உதவி, பொருளாதார மூலமான சமூக,அரசியல் மாற்ற பயணத்தில் முல்வோம். ஒன்றிணைவோம்
8778560804

சுப்ஹானல்லாஹ்!தனது படைப்பினங்கள் ஒவ்வொற்றிர்க்கும் இறைவன் அளித்திருக்கும் அருட்கொடை... இவ்வித நுண்ணறிவு!







A female falcon was equipped with a satellite tracking system in South Africa before migrating to Finland. Image shows tracker data. In just 42 days, she flew over 10.000 km, at an incredible average of 230 km per day and nearly in a straight line

📷via reddit@ChemBioJ

Sunday 12 March 2023

தங்கத்திற்குரிய ஜகாத்

தங்கத்திற்குரிய ஜகாத்
எண்பத்தியேழரை கிராம்
தங்கத்திற்கு – 2 கிராம் 187.5
மி.கி.
11 பவுனுக்கு 2 கிராம் 250
மி.கிராம்
12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.
கிராம்
13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.
கிராம்
14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.
கிராம்
15 பவுனுக்கு 3 கிராம்
16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.
கிராம்
17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.
கிராம்
18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.
கிராம்
19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.
கிராம்
20 பவுனுக்கு 4 கிராம்
25 பவுனுக்கு 5 கிராம்
30 பவுனுக்கு 6 கிராம்
35 பவுனுக்கு 7 கிராம்
40 பவுனுக்கு 1 பவுன்
50 பவுனுக்கு ஒன்னேகால்
பவுன்
60 பவுனுக்கு ஒன்றரை பவுன்
70 பவுனுக்கு ஒன்னே
முக்கால் பவுன்
80 பவுனுக்கு இரண்டு பவுன்
90 பவுனுக்கு இரண்டேகால்
பவுன்
100 பவுனுக்கு இரண்டரை பவுன்

📔ஜகாத் விபரம்📔
🔹Rupees. 👉Rs.          Ps.
🔹100.        👉 2.           50 
🔹200         👉5.            00
🔹300         👉7.            50
🔹400.        👉 10.         00
🔹500.        👉12.          50
🔹600.        👉15.          00
🔹700.        👉17.          50
🔹800.        👉20.          00
🔹900.        👉22.          50
🔹1000.      👉25.          00ந்
🔹1500.      👉37.          50
🔹2000.      👉50.          00
🔹2500.      👉62.          50
🔹3000.      👉75.          00
🔹3500.      👉87.          50
🔹4000.      👉100.        00
🔹4500.      👉112.        50
🔹5000.      👉125.        00
🔹5500.      👉137.        50
🔹6000.      👉150.        00
🔹6500.      👉162.       50
🔹7000.    👉175.        00
🔹7500.       👉187.       50
🔹8000.       👉200.       00
🔹8500.       👉212.       50
🔹9000.       👉225.       00
🔹9500.       👉237.       50
🔹10000.     👉250.      00
🔹15000.     👉375.      00
🔹20000.     👉500.      00
🔹25000.     👉625.      00
🔹30000.     👉750.      00
🔹35000.     👉875.      00
🔹40000.     👉1000.    00
🔹45000.     👉1125.    00
🔹50000.     👉1250.    00
🔹55000.     👉1375.    00
🔹60000.     👉1500.    00
🔹65000.     👉1625.    00
🔹70000.     👉1750.    00
🔹80000.     👉2000.    00
🔹90000.     👉2250.    00
🔹1 lakh.      👉2500.    00
🔹2 lakh.      👉5000.    00
🔹3 lakh.      👉7500.    00
🔹4 lakh.      👉10000.  00
🔹5 lakh.      👉12500.  00
🔹6 lakh.      👉15000.  00
🔹7 lakh.      👉17500.  00
🔹8 lakh.      👉20000.  00
🔹9 lakh.      👉22500.  00
?
?10 lakh.    👉25000. 00
🔹20 lakh.    👉50000. 00
🔹30 lakh.    👉75000. 00
🔹40 lakh.    👉1 lakh.
🔹50 lakh.    👉1 lakh 25000
🔹1 crow.     👉2 lakh 50000
🔹2 crow.     👉5 lakh.

Thursday 9 March 2023

ஒரு நாள் நீங்கள் வகித்த பதவிகளை விட்டுச் செல்வீர்கள், உங்களை சுற்றியிருந்தவர்கள், கோல் புறம் பேசியவர்கள், போட்டுக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், அண்டிப் பிழைத்தவர்கள் என உங்கள் அருகாமையில் ஆனந்தம் கொண்டாடியவர்கள் எல்லோரும் சில நாட்களில் உங்களை மறந்து விடுவார்கள்.ஆனால், ஒரு சிலரைத் தவிர அவர்கள் உங்கள் அதிகாரத் துஷ்பிரயோகங்களினால் அநீதிகளுக்கு ஆளானவர்கள், அவர்கள் உங்களை மறக்கவே மாட்டார்கள், அவர்கள் அல்லாஹ்விடம் நீதி கேட்டு மன்றாடிக் கொண்டே இருப்பார்கள்.பதவிகள் அமானிதங்கள் அவற்றை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள், ஆமா சாமிகள், ஆள் பிடித்து கால் பிடித்து வால் பிடித்து அண்டிப் பிழைத்தோர் எவரும் ஸக்ராத்தின் போதும், மண்ணறையிலும் மஹ்ஷரிலும் உங்களுக்கு துணை நிற்க மாட்டார்கள்!










தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். 

பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் பச்சரிசி நோன்பு கஞ்சியில் பகுதி அளவுக்கு கம்பு பனிவரகு தினை போன்ற சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். 

ஆண்மை கோளாறுகளும் இளம் பெண்களுக்கு இரத்தமின்மையும் கருப்பை கோளாறுகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இது சந்ததி உருவாக்கத்தில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
 
அதேபோல வளரும் பிள்ளைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடும் மனவலிமை இல்லாததும் நினைவுத்திறன் குறைபாடும் பரவலாக காணப்படுகின்றன. 

சமுதாயத்தில் கல்விப் பணியாற்றுபவர்களால் மட்டுமே இதை சரியான விகிதத்தில் புரிந்து கொள்ள முடியும். 

ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்கே அழிந்து போகிறது.

இந்த எல்லா சிக்கல்களையும் ஒருமாத நோன்புகஞ்சி தீர்த்துவிடாது. ஆனால் நோய்களின் சதிவலைகளிருந்து சமுதாயம் விலகி நிற்பதற்கான விழிப்புணர்வை நிச்சயம் இது ஏற்படுத்தும்.

சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து ஊரில் நோன்பு கஞ்சிக்கு தேவையான சிறுதானியங்களை ஆண்டுதோறும் தர்மமாக வழங்கினால் மஹல்லாவாசிகளின் மருத்துவ செலவுகள் பெருமளவு குறைந்துபோகும்.

உடலாலும் உள்ளத்தாலும் வலிமையான சமூகத்தால் மட்டுமே வணக்க வழிபாடுகளை அதிகரிக்கச் செய்ய முடியும். அல்லாஹ்வுடைய தீனையும் உம்மத்தையும் உயர்த்திட முடியும்.

நோன்புகஞ்சிக்கு அரசு வழங்கும் பச்சரிசியில் சரிபாதி சிறுதானியங்களை வழங்கிட கோரிக்கை வைக்க வேண்டும். இதனால் தமிழகத்தில் 30 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய  அன்பும் பாராட்டுக்களும் தமிழக அரசுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் என்பதையும் சேர்த்தே கவனத்தில் கொள்ள வேண்டும்.  

நோன்புக் கஞ்சியில் சிறுதானியங்களுடன் முருங்கை முடக்கற்றான் தூதுவளை ஆகிய கீரை வகைகளையும் ஒவ்வொன்றாக சிறிது சேர்த்துக் கொண்டால் ஆன்மாவோடு சேர்த்து உடலும் வலிமையடையும்.மிக முக்கியமாக படிக்கின்ற பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கும்.

இவையெல்லாம் பலநூறு ஆண்டுகளாக பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியில் இருந்த மூலப் பொருட்கள் தான். இடைக்காலத்தில் கொஞ்சம் மறந்துவிட்டோம்.

இப்போது காட்டாயத் தேவையாக மாறிவருகிறது.

உலமாக்கள் ஜமாஅத் நிர்வாகத்தினர் சமுதாயப் புரவலர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொஞ்சம் சிரத்தையெடுத்தால் மகத்தான மாற்றங்களை கண்முன் காணமுடியும்.