சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது அரசு கட்டணத்தை ஒரு சில பெற்றோர்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, “புத்தகம் நோட்டுகள் இருப்பு இல்லை” என அலைக்கழிக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர்களை ஒருங்கிணைத்து மிகுந்த தடைகளுக்கு இடையில் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.