அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 8 February 2014

சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் எனக் கோரிக்கை

சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் எனக் கோரிக்கை

February 8, 2014  05:24 pm






















சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

காங்கிரஸ் பெருன்மான்மையோடு வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பேன்: ராகுல் காந்தி!


Rahul Gandhi
ஜார்க்கண்ட்: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அபத்தங்கள் நிறைந்த குஜராத் பாடப்புத்தகம்!


Text Book
அஹ்மதாபாத்: “தேசத் தந்தை மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 30, 1948” – இது தவறுகள் நிறைந்த குஜராத் ஆங்கில மீடியம் எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓர் உதாரணம்.

ஆர்எஸ்எஸ் நச்சுத் தன்மை உடையது என்று கூறிய படேலுக்கு மோடி சிலை அமைக்கிறார் : ராகுல்


 : 08 February 2014 02:22 PM IST

குஜராத் மாநிலம் பர்தோலியில் இன்று நடைபெறும் காங்கிரஸ்  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் நச்சுத் தன்மை உடையது என்று கூறிய படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கிறார் மோடி என்றார்.

Tuesday 4 February 2014

நள்ளிரவில் முஸ்லிம் பெண்ணை கைக்குழந்தையுடன் அழைத்துச் சென்ற போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து அணி திரண்ட மக்கள்!

5 Feb 2014


நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மாதவலாயம் பகுதி பொது மக்கள் மற்றும் திரளான பெண்கள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணணை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

2ஜி ஊழல்:தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது!


spectrum-350_052912092635
புதுடெல்லி:இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடெல்லியில் வெளியிட்டார்.

தில்லி : பலாத்காரத்துக்கு உள்ள 9 வயது சிறுமி கவலைக்கிடம்


05 February 2014 
தில்லியில், பூங்காவில் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 25 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, குற்றவாளி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளான். இதில் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளன


news dinamani thanks