ஜார்க்கண்ட்: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அஹ்மதாபாத்: “தேசத் தந்தை மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 30, 1948” – இது தவறுகள் நிறைந்த குஜராத் ஆங்கில மீடியம் எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓர் உதாரணம்.
குஜராத் மாநிலம் பர்தோலியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் நச்சுத் தன்மை உடையது என்று கூறிய படேலுக்கு குஜராத்தில் சிலை அமைக்கிறார் மோடி என்றார்.
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மாதவலாயம் பகுதி பொது மக்கள் மற்றும் திரளான பெண்கள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணணை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
புதுடெல்லி:இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடெல்லியில் வெளியிட்டார்.
தில்லியில், பூங்காவில் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை 25 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, குற்றவாளி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளான். இதில் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.