Sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday 9 December 2020
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பி நீண்ட நாட்களாக ஆபத்தாகவும் தொய்வாகவும் இருந்ததால் அதனை நமது ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இன்று புதிய மின் கம்பம் அமைத்து சரி செய்யப்பட்டது. மேலும் தற்போது புதிதாக அமைக்கபட உள்ள தார்சாலைக்கு இடையூராகவும் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்து இருந்த மின் கம்பத்தை அகற்றி புதியதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பல வருடங்களாக மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த பனை ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. மற்றும் நமது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் தொய்வான இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் கூடிய விரைவில் அனைத்து மின் கம்பங்களும் சரி செய்யப்படும். என்றும் மக்கள் பணியில்.. நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்கள்.
Monday 7 December 2020
நமதூர் புதுவலசை கிராமத்தில் *Campus Front of India* நடத்திய ஓவிய போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று (07.12.2020) அஸர் தொழுகைக்குப் பின் 4.45 மணி அளவில் நமதூர் மதரஸா கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு விழாவில் நமதூர் ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், இயக்கத்தினர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தார்கள்.ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற முஹம்மது அரிஃபித் S/o சகாபுதீன் அவர்களுக்கு சமூக ஆர்வலர் ஆசிக்கின் அவர்களால் அளிக்கப்பட்து.இரண்டாம் பரிசு பெற்ற முஹம்மது அஜ்ரான் S/o அஜ்மல் கான் அவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மீரான் ஒலி அவர்களால் அளிக்கப்பட்டது.மூன்றாம் பரிசு பெற்ற முஜாஹித் ரிஃபா S/o முஹம்மது ஃபைசல் அவர்களுக்கு சங்கத் தலைவர் மஜீத் அவர்களால் அளிக்கப்பட்டது.இந்த ஓவியப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு SDPI கட்சி புதுவலசை கிளைத்தலைவர் அஸ்வர் ரஹ்மான், துணை செயலாளர் நல்ல இபுராஹிம், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஜாவித், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளைத்தலைவர் முஹம்மது ரிஸ்வான், பாப்புலர் ஃப்ரண்ட் இராம்நாடு டிவிஷன் தலைவர் ஹமீத் இபுராஹிம், SDPI கட்சி உறுப்பினர் அபுல் அவர்களால் பரிசளிக்கப்பட்டது.இப்பரிசளிப்பு விழாவில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுவலசை கிளையின் தலைவர் அஸ்மான் அவர்கள் முன்னிலை வகித்தார்பரிசளிப்பு விழாவினை அஸ்லாம் அவர்கள் தொகுத்து வழங்கினார். நன்றியுரை முஹம்மது ரிஸ்வான் அவர்களால் வழங்கப்பட்டது
Sunday 6 December 2020
படித்ததில் பிடித்தது என்றும் என்னுடன் அவள்...♥️♥️♥️♥️20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்...30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள்...ஆனால் 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்...50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்கமாட்டார்கள் என உணருவான்...60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான்...70 வயதில் அவள் தாய் ஆவாள்...இவன் சேய் ஆவான்...இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான்...அவள்தான் மனைவி.இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில்இனிதே பயணியுங்கள்.
Thursday 3 December 2020
_இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் இன்று முதல் கட்டமாக மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி தற்பொழுது முதற்கட்டமாக கடற்கரைப்பகுதியில் நடைபெறுகிறது... இதனைத் தொடர்ந்து தாவு காடு நாடார் தெரு மற்றும் புதுவலசையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூடிய விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்_ ... *என்றும் மக்கள் பணியில்... புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர்V.மிரான் ஒலி அவர்கள்...*
Subscribe to:
Posts (Atom)