அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 May 2015

இஸ்லாம் அழகானது அதை பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்க முனைபவர்கள் அதர்கு உரிய தண்டனையில் இருந்து தப்பமுடியாது சவுதி மன்னர் சல்மான் சூழுரை!





வெள்ளியன்று சவுதி அரேபியாவின் தம்மாம் அருகே உண்டான கதீஹ் நகரில் வெள்ளி கிழமை ஜீம்ஆ தொழுகையின் போது தற்கொலை குண்டு தாரி தாக்குதலை அரங்கேற்றினான்

துபாய் விமான நிலையத்தில் அதிகரித்து வரும் கைதுகள்.. இது துபை மற்றும் அமீரகம் வருகை தருவோரின் கனிவான கவனத்திற்கு.







சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் Dubai சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சில பயணிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் கைது செய்யப்ட்ட பயணிகள் அனைவரும் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டு காட்டவேண்டிய விடயம்.

Sunday 3 May 2015

தொடர்ந்தும் ஆரோக்கியமாக வாழ தண்ணீர் அருந்துங்கள்..



தொடர்ந்தும் ஆரோக்கியமாக
சாதாரணமாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வருவதால் நம்மை தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி.
இதை கடைபிடிக்கும் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இதை பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
செரிமானத்திற்கு உதவும்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.

Saturday 2 May 2015

உயிர் காக்கும் மருந்துகள்


மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது  முக்கியம்.
ஆனால் சாதாரண தலைவலி என்று கடைகளில்  இரண்டு ரூபாய்க்கு மாத்திரை வாங்கி  சாப்பிட்டு விட்டு வேலையை பார்க்கப் போவதை கூட டாக்டரிடம் சென்றால் இன்றைய நிலையில் ஸ்கேன் முதல் தன்னிடம் உள்ள அவ்வளவு பரிசோதனை கருவிகளுக்கும் வேலை வைத்து நம்மிடம் கையில் உள்ள காசுகளை எல்லாம் பிடுங்கி விட்டு சாதாரண வலி நிவாரண மாத்திரை,அதற்கு துணை மாத்திரை என்று எழுதி வாங்க வைத்து விட்டு தங்கள் கமிசனை மருந்துக்கடைக் காரர்களிடம் வாங்கிக்கொள்ளும் அளவில்தானே இன்றைய மருத்துவர்கள் உள்ளனர்.

மாட்டிறைச்சியின் மறுபக்கம்.!





மோடி யின் இந்துத்துவா கொள்கை ஆட்சியில் மாட்டிறைச்சிக்கு தடை,மாடுகளைக் கொல்லத் தடையால் பலப் பிரச்னைகள் உணடாகியுள்ளது.
அந்த பட்டியலில் மருந்துப் பொருட்கள் விலை உயர்வும் இடம் பிடித்துள்ளது.
ஜெலட்டின் கேப்ஸ்யூல் கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
இதனால் இப்பொருள் களின் விலைகளும் உயரு கின்றன.
மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுப வர்கள் இந்த உண்மை தெரியும்போது சற்று கடினமாகவே இருக்கும். 
ஆனால், கால்நடைகள் கொல்லப்படுவது வெறும் இறைச்சி உண்பவர்களின் மகிழ்வுக்காக மட்டுமல்ல. மருந்து தயாரிக்கும் துறை களிலும் பயன்படுத்துவதற் காக கால்நடைகள் கொல் லப்படுகின்றன.
மருந்துகளை ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் (குப்பிகள்) அடைத்து வழங்குகிறார்கள். வைட்ட மின் சத்து மாத்திரைகள், கோழித் தீவனம் எலும் புகள், தோல் மற்றும் கால் நடைகளின் திசுக்களிலி ருந்து தயாரிக்கப்படுகிறது.
மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த செயல்அலுவலராக உள்ள ஒருவர் கூறும்போது, சில வழிகளில் அல்லது மற்ற வழிகளில் நாம் எல்லோ ருமே நம்முடைய அன் றாட வாழ்வில் மாட்டி றைச்சியை எடுத்துக்கொள் கிறோம் என்று கூறினார். மாநில அரசு வழக்கு போட்டுவிடும் என்கிற அச்சத்தால் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண் டுள்ளார்.

கொண்டைக்கடலை.




சத்து மிக்க கடலை பற்றி பார்க்கலாம்.அதை பற்றி இன்று கடலை போடாலாம் நாம்.
இந்தியாவில் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. 
இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ (Bengal gram) என்றும் அழைக்கப்படுகிறது. 
வங்காளத்தில் அதிகம் விளைவதால் இந்தப் பெயர்.. 
வங்கத்தில் இதை பச்சையாகவும் சுட்டும் சாப்பிடுகிறார்கள்.
. உலர வைப்பதற்கு முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது. அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து விற்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படிபச்சையாக கிடைப்பது இல்லை.

உலர வைக்கப்பட்டு கிடைப்பதிலேயே பல வகை உண்டு. சிறியதாக பச்சை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது.

குவியும் பிணங்கள்…இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: நேபாள் அரசு (வீடியோ இணைப்பு)

குவியும் பிணங்கள்…இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: நேபாள் அரசு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 02 மே 2015, 06:41.54 மு.ப GMT ]
நேபாள் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6600 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

உடல் பருமனாவதையும் தொப்பை வைப்பதையும் தவிர்க்க உதவும் 7 உணவுகள்!


1. பழங்களும் மரக்கறிகளும் :

நமக்குப் பரவலாகக் கிடைக்கும் கீரைவகை, புரோக்கோலி, காளான்கள், ஸ்பினாச்சி உட்பட மரக்கறிகளும் ஆப்பிள்கள், பெர்ரீஸ், பப்பாசி, அன்னாசிப் பழம் உட்பட பழவகைகளும் எமது உடலில் கொழுப்பைக் கரைக்க முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

டொங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பசுபிக் சமுத்திரத்தில் உலகில் புதியதொரு தீவு உருவாகியிருந்தது.