அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 27 January 2013

அஸ்ஸாமில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்!



8-ied-blasts-rock-assams
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலம் கோல்பரா மற்றும் துப்ரி மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. உல்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் தகவல்கள் இதுவரைக் கிடைக்கவில்லை
. குண்டுவெடிப்பு நடந்த இப்பகுதிகளில் தான் முஸ்லிம்களுக்கெதிராக கலவரம் நடைபெற்றது.
கோல்பரா மாவட்டத்தில் உள்ள மொரியகிச்சி சந்தை, போரஹிதா மற்றும் ஜமதார் பகுதிகளிலும், அதேபோல், துப்ரி மாவட்டத்தில் உள்ள ஏர்கிடா, சிராகுத்தி, மெட்டாரேட்டேரி ஆகிய இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியரசு தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் என உல்பா மற்றும் சில தீவிரவாதக் குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

.thoothuonline thanks

No comments:

Post a Comment