அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 2 January 2013

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு!


Posted Date : 07:27 (03/01/2013)
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கபட்டது.


சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் விவகாரங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி பி.ஆர். சிவகுமார் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சொத்து மேல்முறையீடு தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர் பாரி ஆஜராகி தமிழில் வாதிட்டார்.ஆனால் அவர் தமிழில் வாதிடுவதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.


இருப்பினும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை அமர்வு உள்பட உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் முன்னிலையில் தான் தொடர்ந்து தமிழில் வாதிட்டு வருவதாகவும் வழக்கறிஞர் பாரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை வேறொரு நீதிபதியின் விசாரணைக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

"உயர் நீதிமன்றத்தில் தமிழும் ஒரு வழக்காடு மொழிதான் என்று வழக்கரைஞர் பாரி கூறுகிறார்.ஆனால் இது அரசியல் சாசன சட்ட விதிகளின்படி ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கினை மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்" என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.

news.vikatan thanks

No comments:

Post a Comment