அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 February 2013

அமெரிக்காவின் மையப்பகுதியிலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும்: வடகொரியா

[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 
வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக உள்ள நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் நோக்கில் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவது, அணுகுண்டு வீசப்பட்டால் அமெரிக்கா எப்படி தீப்பிடித்து எரியும், இதுபோன்ற காணொளிகளை உருவாக்கி அமெரிக்காவை வடகொரியா சமீபகாலங்களாக மிரட்டி வருகின்றது
.
கடந்த டிசம்பர் மாதம் வடகொரியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது. இந்த ஏவுகணை 10 ஆயிரம் கி.மீ வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 வாரங்களுக்கு முன்பு வடகொரியா அணுகுண்டு சோதனை ஒன்றையும் நடத்தியது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக வடகொரியா அரசு இணையதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறுகையில், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி மட்டுமல்ல, மையப்பகுதியிலும் எங்களால் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும்.
அந்த தொழில்நுட்பங்களை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்களிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும், அணுகுண்டும் இருக்கிறது.
ஆயுத பலம் உள்ள சுதந்திர நாடாக நாங்கள் இருக்கிறோம், எந்த நாடாலும் எங்களை அச்சுறுத்த முடியாது என மிரட்டல் விடுத்திருக்கிறது

. newsonews thanks

No comments:

Post a Comment