ராமேசுவரம், மார்ச் 31-
ராமேசுவரம் அருகில் உள்ளது தங்கச்சிமடம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால்
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை
ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட இப்பிரச்சினை இரு
சமுதாயத்தினருக்கிடையேயான சண்டையாக மாறியது. இதனால் ஒருவருக்கொருவர் பயங்கராமாக
மோதிக்கொண்டனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர்.
இதையறிந்தது காயமடைந்தவர்களின் உறவினர்கள் தங்கச்சி மடம் போலீஸ் நிலையத்தை
முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம்
நடந்தது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் போலீஸ் வாகனத்தை எரித்தனர். இதனால் பதட்டத்தை தணிக்க போலீசார்
குவிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்
ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் கும்பலை கலைக்க வானத்தை நோக்கி
துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டம்
காணப்படுகிறது.
maalaimalar thanks
No comments:
Post a Comment