அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

தங்கச்சிமடத்தில் இருதரப்பினரிடையே மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு



ராமேசுவரம், மார்ச் 31-
 
ராமேசுவரம் அருகில் உள்ளது தங்கச்சிமடம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட இப்பிரச்சினை இரு சமுதாயத்தினருக்கிடையேயான சண்டையாக மாறியது. இதனால் ஒருவருக்கொருவர் பயங்கராமாக மோதிக்கொண்டனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
 
அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இதையறிந்தது காயமடைந்தவர்களின் உறவினர்கள் தங்கச்சி மடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸ் வாகனத்தை எரித்தனர். இதனால் பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
பொதுமக்கள் தாக்கியதில் போலீசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் கும்பலை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.

maalaimalar thanks

No comments:

Post a Comment