கொல்கொத்தா
: கால்பந்து மைதானத்திற்குள் புகுந்த பாம்புகளால் கால்பந்து
விளையாட்டு வீரர்கள் பதற்றமடைந்தனர்.
கொல்கொத்தாவில் நடைபெற்ற ஐ.லீக் கால்பந்து
தொடரின் லீக் போட்டியில் மோகன் பகான், பெய்லன் ஆரோஸ் அணிகள் மோதின. இந்த போட்டி
நடைபெற்றுக் கொண்டு இருந்த போது மைதானத்திற்குள் 6 க்கும் மேற்பட்ட விஷ
பாம்புகள் நுழைந்தன. இதனால் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியும்
பதற்றமும் அடைந்தனர்.
இதுமட்டுமல்லாமல் 15-ற்கும் மேற்பட்ட
பாம்புகள் வீரர்களின் "டிரசிங் ரூம்" மாடிப்படிகளிலும் காணப்பட்டன. உடன்
மைதான ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பாம்புகளை வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து
கால்பந்தாட்ட வீரர்கள் சமாதானம் அடைந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி சேர்மன் பி.கே சுர், "இது பாம்புகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. வெப்பம் அதிகமாக இருப்பதால் இவை வெளியே வந்துள்ளன. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி சேர்மன் பி.கே சுர், "இது பாம்புகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. வெப்பம் அதிகமாக இருப்பதால் இவை வெளியே வந்துள்ளன. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
inneram thanks
No comments:
Post a Comment