அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

வன்முறையை தூண்டும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்



ஏப்ரல் 30, 2013  at   
 
மத மற்றும் சாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடரபாக பொதுநல மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு, இவ்வாறு கூறியிருக்கிறது.
அரசியல்வாதிகள், சாதி மற்றும் மதத் தலைவர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சாதி, மத மோதல்களை தூண்டும் இத்தகைய பேச்சுகள், நாட்டு மக்களுக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லதல்ல என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவ்வாறு பேசுவதைத் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment