MONDAY, 27 MAY 2013 19:39 ADMINISTRATOR
இராமநாதபுரம் மே 26. இராமநாதபுரம சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அவர் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள சாலை ஓர கடைகளை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். அங்கு வந்த பயணிகளிடம் கழிப்பறையை பயன்படுத்த எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த கட்டணக் கழிப்பறை ஊழியரை எச்சரித்து கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வாங்கி கொடுத்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையும் பார்வையிட்டு அதில் உள்ள குறைபாடுகளை உடனே சீர் செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
அப்போது பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளும்,ஊழியர்களும் பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வந்து செல்லும் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் களாலும் பஸ் நிறுத்தும் ரேக்குகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களாலும் தினசரி விபத்துக்கள், இடையூறுகள் ஏற்படுவதாக எம்.எல்.ஏ விடம் முறையிட்டனர்.
பின்னர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு சென்று முறையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்துக் கொள்ளும்படி உத்திரவிட்டார். பஸ் நிலைய பின்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரையும் குப்பைகளையும் உடனே அகற்றி சுகாதாரம் பேணும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அப்போது நகராட்சி ஆணையாளர் (பொ) மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, இப்ராஹிம், பரக்கத்துல்லா பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க.,ம .ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment