ஹார்ட் அட்டாக் எனும் திடீர் இதய அதிர்ச்சி நோயால் இன்று பலர் உயிரிக்கிறார்கள். வாலிபர், வயோதிகர் யாரையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை.
இந்த திடீர் அதிர்ச்சியை தவிர்க்க தேங்காய் கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றைச் எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை எண்ணெயைக் குறைத்துவிடுங்கள். ஓட்ஸ் சாப்பிடுங்கள். அது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். அதற்காக ஒரேடியாகவும் உப்பைக் குறைத்துவிடாதீர்கள். அது உடம்பிலுள்ள சோடியம் என்ற பொருளை குறைத்து, வேறு பிரச்னைகளை உண்டாக்கும். இவர்கள் வெந்நீர் அடிக்கடி குடிக்கலாம்.
புகைப்பிடிப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கலாம். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். இறைச்சியை தவிர்ப்பது நல்லது. உடலின் எடை கூடாமல் சரியான அளவில் வைத்துக் கொள்ளவும். உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை போன்றவை தாக்கமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு உடலை கட்டுப்பாடோடு வைத்திருந்தால், அப்பரம் என்ன ஹார்ட் அட்டாக்குக்கு குட் பை தான்.
dinamani. thanks
No comments:
Post a Comment