அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 11 May 2013

உருவானது மகாசேன் புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

[ சனிக்கிழமை, 11 மே 2013, 
வங்கக் கடலில் புதிதாக மகாசேன் புயல் உருவெடுத்துள்ளது. இதனையடுத்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருந்தது.
இது எந்த நேரத்திலும் புயலாக உருவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து 1700 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலானது.
இந்த மகாசேன் புயலானது வங்கதேசம்- மியான்மர் கடற்கரையை நோக்கி புயலாக நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய புயல் சின்னத்தால் அடுத்த 36 மணி நேரத்துக்கு அந்தமான் பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வரையில் காற்று வீசும்.
அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் அந்தமான் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.


newindianews thanks

No comments:

Post a Comment