May 31, 2013 03:29 pm
இந்தியாவில் வெயில் தாக்கத்தினாலும் வெப்பக்காற்றினாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியப் மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கின்றது.
இந்தப் பிரதேசங்களில் வீசும் வெப்பக்காற்றினால் மருத்துவமனைகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன.
பெரும்பாலான நோயாளிகள் உடலில் நீர்ச்சத்து குறைந்து களைப்படைந்தவர்களாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்னிந்தியாவிலும், ஆந்திர மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் வெயில் தாளமுடியாமல் உயிரிழந்துள்ளனர்.
ஏனையவர்கள் வெப்பக்காற்றினால் ஏற்பட்ட பல்வேறு உடல் பாதிப்புகளினால் உயிரிழந்துள்ளனர்.
வழமையாக மே மாத காலப்பகுயில் இந்தப் பகுதிகளில் பருவமழை பெய்வதால் வெப்பக்காற்று சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இம்முறை இன்னும் பருவமழை பெய்யாதபடியாலேயே வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்
thamilan thanks
No comments:
Post a Comment