- SATURDAY, 01 JUNE 2013 15:24

பாதுகாப்பு குறைபாடு இருந்ததால், 162 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு, போக்குவரத்துத் துறை அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதுத் தவிர வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், பகுதி நேரமாக மாணவர்களை அழைத்து சென்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 10 திகதி திறக்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது, "தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு, தகுதி சான்று உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திட மொத்தம் 50 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள். இவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதுவரை மொத்தம் 538 பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அதில் 376 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருந்ததால், தகுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது. 162 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இதனால் இந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் தரவில்லை.
இவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக பள்ளி வாகனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளனர்.
இதுத் தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது, "தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், பாதுகாப்பு, தகுதி சான்று உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்திட மொத்தம் 50 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள். இவர்களை கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதுவரை மொத்தம் 538 பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அதில் 376 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருந்ததால், தகுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது. 162 வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இதனால் இந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் தரவில்லை.
இவர்களுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக பள்ளி வாகனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது." என்று கூறியுள்ளனர்.
4tamilmedia THANKS
No comments:
Post a Comment