பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், பூமியின் சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்த புகார்கள் குவிகிறது. அதாவது ஏலியன்கள், அரக்கர்கள், ஆவிகள் மற்றும் சூனியக்காரிகள் வந்து தொல்லை தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கடந்த 3 ஆண்டாக வருகின்றன. ‘ஏலியன்’ என அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து நடமாடுவதாக ஒரு தகவல் அடிக்கடி வெளிவருகிறது. குறிப்பாக கனடா நாட்டில் இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் இவ்வாறு 2010-ம் ஆண்டில் 17 புகாரும், 2011-ல் 31 புகாரும், 2012-ல் 49 புகாரும் வந்திருக்கின்றன. இந்த அவசர உதவி தகவல்களை பெற்று போலீஸ் சென்று விசாரித்ததில் ஆதாரபூர்வமான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. யார் மீது வழக்கும் பதிவாகவில்லை. இந்த நூதன புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஆன்டிரி ஹெய்லோப் கூறுகையில், ‘மனநோய் மற்றும் பலவீன சிந்தனை கொண்ட சிலரே இது போன்ற விசித்திர தகவல்களை கொடுக்கிறார்கள்’ என்கிறார்.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்காத வரை எதுவும் உண்மை இல்லை என்று சர்வதேச விஞ்ஞானிகள் ஒதுங்கி கொண்டாலும், வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய சந்தேக ஆராய்ச்சி மட்டும் நிற்கவில்லை. பல நாடுகளில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
puthiyaulakam THANKS
No comments:
Post a Comment