வங்கதேசத்துக்கு அளிக்கப்பட்டுவந்த வர்த்தக-சலுகை நடைமுறையை மீளப்பெற்றுக்கொள்ள அமெரிக்க அரசு எடுத்துள்ள முடிவினை வங்கதேச அரசு விமர்சித்துள்ளது.
வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் நிலைமைகள் அபாயகரமானதாக உள்ளதாக சுட்டிக்காட்டியே அந்நாட்டுடனான சிறப்பு சலுகைத் திட்டம் அமெரிக்காவினால் வாபஸ் பெறப்படுகின்றது.
ஆடைத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊக்குவிக்க தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வங்கதேசம் கூறுகிறது.இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக வங்கதேச வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் தலைநகர் டாக்கா அருகே தொழிற்சாலை கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் ஆயிரத்து நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, வங்கதேசத்தில் தொழிலாளர்களின் உரிமைகளும் வேலைத்தள பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேம்படுத்தப்படும்வரை அந்நாட்டுக்கான வர்த்தக சலுகைகள் இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
bbc thanks
No comments:
Post a Comment