சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது அரசு கட்டணத்தை ஒரு சில பெற்றோர்கள் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, “புத்தகம் நோட்டுகள் இருப்பு இல்லை” என அலைக்கழிக்கிறது பள்ளி நிர்வாகம். பெற்றோர்களை ஒருங்கிணைத்து மிகுந்த தடைகளுக்கு இடையில் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.

போஸ்டர்“கல்வித்துறை அதிகாரிகளை தூங்கவிடக் கூடாது, பள்ளி முதலாளியின் அடியாள் படைக்கு அஞ்சத் தேவையில்லை, கல்வி உரிமைக்கான நெடிய போராட்டத்தில் கூலிக்கார அடியாட்கள் என்ன செய்ய முடியும்?” என விளக்கி பேசினோம். நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளோம். பிரச்சாரம் நகர மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. வீனஸ் குமார் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற பிரச்சாரம் தோல்வி அடைந்துள்ளது.
சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புத்தகம் தர மறுத்த்து பற்றி புகார் செய்தோம். அவரோ, “என் வரம்பு மீறி பள்ளி நிர்வாகத்திடம் பேசியுள்ளேன். அவர்கள் என் மீது வருத்தப்படுவதாக கேள்வி பட்டேன். அது, கல்வித் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலை” என தெரிவித்தார்.
நமது சங்கத்தினர் “உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி தாருங்கள், கல்வித்துறை அதிகாரிகளை நாங்கள் செயல்பட வைக்கிறோம். எங்கள் போராட்டம் அனைத்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்கு எதிராக நடத்துகிறோம். நீங்கள் சொல்வது போல் ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு எதிராக இல்லை” என்றோம்.
டி.எஸ்பி.யோ “போராட்டத்தில் உதாரணத்திற்கு வீனஸ் பள்ளியைதான் அனைவரும் பேசுவார்கள். அதனால் அசாதாரண நிலை உருவாகும்” என இரண்டு முறையும் நமது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியுள்ளார்.
நாம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் எந்த போராட்டமாக இருந்தாலும் எஸ்.பியிடம் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என அனைத்து ஆய்வாளர்களும் ஒரே மாதிரி கூறுகிறார்கள்.
கூட்டம்சேத்தியாதோப்பில் எஸ்.டி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அதோடு ”அன்குவாலிபைடு பீஸ்” என்று சுமாராக படிக்கிறார் எனக்காரணம் கூறி அந்த மாணவனிடம் ரூ 4000 கடந்த ஆண்டு வசூலித்து இருக்கிறார்கள். கட்டணத்தை அச்சடித்த பிரசுரத்தை பள்ளி வளாகத்தின் முன்பு பெற்றோர்களிடம் விநியோகித்தோம். கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளோம். மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சேத்தியாதோப்பு கிளை சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டோம் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் எஸ்.பி., “பள்ளி நிர்வாகத்திடம் பேசி பிரச்சினையை தீர்க்க சொல்லியிருக்கிறார். நானும் பேசியுள்ளேன். கோர்ட்டுக்கு எல்லாம் வேனாம் சார்” என பவ்யமாக கூறினார். இதே ஆய்வாளர் பிரசுரம் கொடுத்த சேத்தியாதோப்பு கிளை அமைப்பாளர் பாலு மகேந்திரனிடம் ”பள்ளியிடம் பணம் கேட்டாய் என வழக்கு போட்டு உன்னை ரிமாண்ட் செய்வேன்” என மிரட்டினார்.
இந்நிலையில் எஸ்.டி.எஸ். பள்ளியின் பெற்றோர்கள் நமது சங்கத்துடன் இணைந்து 28-6-13 அன்று மாலை 5-00 மணிக்கு சேத்தியாதோப்பு, அள்ளுர் லெட்சுமி திருமண மண்டபத்தில் அரங்கு கூட்டம் நடத்த உள்ளோம். இதற்கான சுவரொட்டி சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் ஒட்டியுள்ளோம்.
“பல மடங்கு கட்டணம், தனியார் பள்ளி முதலாளியை தட்டிக் கேட்க முடியும், தகுதியற்ற ஆசிரியர் பாடம் நடத்தினால் கேள்வி கேட்க முடியும், என் பள்ளி இஷ்டம் இருந்தால் படி இல்லையென்றால் டி.சி.வாங்கிச்செல் என பள்ளி முதலாளி பேசினால் அவன் தலையில் கொட்டுவதற்கு நமக்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாது காப்பு மையம் இருக்கிறது” என்ற நம்பிக்கையை கிராம மக்களிடம் ஏற்படுத்தியுள்ளோம்.
தரமான கல்வி எது? தனியார் பள்ளியின் தரம் என்ன என்பதை மக்களிடம் பேசுகிறோம். வேறுவழி என்ன என திருப்பி கேட்கிறார்கள். மாவட்டம் முழுவதும் நமது சங்கத்தினர் நடத்தும் போராட்டத்தால், தனியார் பள்ளி முதலாளிகளும், கல்வித் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் எரிச்சலாக பார்ப்பதுடன், பெற்றோர்களிடம் பற்றி பரவி விடக் கூடாது என்பதில் அரசு நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கினறனர்.
தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
கடலூர் மாவட்டம்
தொடர்பு 9345067646

vinavu thanks