ராமநாதபுரம்
First Published : 28 June 2013
ராமநாதபுரம் பாரதிநகரில் புதன்கிழமை இரவு பெண் ஒருவரிடம் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை இருவர் பறித்துச் சென்று விட்டதாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் பாரதிநகரில் வசிக்கும் தனபால் மனைவி தேவி (42). இவர் தனது மகளுடன் தங்களது சொந்த ஊரான ரெகுநாதபுரம் பகுதி நத்தகுளம் கிராமத்திற்கு சென்று விட்டு, இருவரும் தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்து தேவி அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
சம்பவம் தொடர்பாக தேவி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
dinamani. thanks
No comments:
Post a Comment