கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்ற ஆசாமி! அமெரிக்காவில் பயங்கரம் (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013,
அமெரிக்காவில் தனது வீட்டுக்கு தீ வைத்துக் கொண்ட ஆசாமி ஒருவர், அங்கு வசித்து வந்த 7 பேரையும் சரமாரியாக சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஹிலாரி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது தாயுடன் பெட்ரோ வர்காஸ்(வயது 42) என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு, மேலாளர்கள் இடாலோ பிசியாட்டி(78) மற்றும் கேமிரா பிசியாட்டி (68) அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இவரது வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்த போது, துப்பாக்கியுடன் வந்த பெட்ரோ, மேலாளர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றான்.
இதனையடுத்து 3வது தளத்துக்கு சென்ற பெட்ரோ, ஒரு வீட்டில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 17 வயது பெண்ணை சுட்டுக் கொன்றான்.
அதன்பின் 5வது தளத்துக்கு சென்று பால்கனியில் நின்றபடி சாலையில் செல்வோர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதில், நடந்து சென்ற 2 பேர் பலியானார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், பெட்ரோவை சரணடையும் படி எச்சரித்தனர். இதனையடுத்து பலமணி போராட்டத்திற்கு பிறகு பெட்ரோவை பொலிசார் மடக்கி பிடித்தனர்.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், பெட்ரோ மனநிலை சரியில்லாத நபர் என தெரியவந்துள்ளது. இச்சம்வபம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment