அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 4 February 2014

நள்ளிரவில் முஸ்லிம் பெண்ணை கைக்குழந்தையுடன் அழைத்துச் சென்ற போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து அணி திரண்ட மக்கள்!

5 Feb 2014


நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மாதவலாயம் பகுதி பொது மக்கள் மற்றும் திரளான பெண்கள் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணணை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
மாதவலாயம் தெற்கு தெருவில் வசிக்கும் நூருல் ஆலம் என்பவரின் மனைவி ஜன்னத் ஆலம் மற்றும் அவரது 5 மாத கைக்குழந்தையை நேற்று இரவு 2 போலீசார் விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தங்களை சுசீந்திரம் போலீசார் என்று கூறி உள்ளனர்.
தற்போது ஜன்னத் ஆலமும், அவரது குழந்தையும் எங்கு இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. எந்த வழக்காக இருந்தாலும் இரவு நேரத்தில் பெண்களை கைது செய்ய கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி எந்த வழக்கும் இல்லாத பெண்ணை கைக்குழந்தையுடன் போலீசார் அழைத்து சென்றது கண்டிக்கத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ்சூப்பிரண்டு மணிவண்ணன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று உறுதி அளித்தார். மனு கொடுக்க வந்தவர்களுடன் மாதவலாயம் லியாகத்அலி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் ஹுசேன், எஸ்.டி.பி.ஐ.கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பொது செயலாளர் காஜா மைதீன்,மாவட்ட செயலாளர் பிர்தவ்ஸ், எஸ்.டி.டி.யு. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உள்பட பலர் சென்றனர்.


news thoothuonline thanks

No comments:

Post a Comment