அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 July 2016

முதலாம் ஆண்டு நினைவு தினம்: அப்துல் கலாமின் சிலை இன்று திறப்பு


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவருக்கு உருவச்சிலை திறக்கப்படுகிறது.

அப்துல்கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக வருவாய்த் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்துடன் தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலமும் கூடுதலாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலை திறப்பு நிகழ்ச்சியும், தேசிய நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இதையொட்டி அவரது நினைவிடத்தில் நேற்று இரவு கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி துறையை சேர்ந்த அதிகாரிகள் நினைவு வளாகத்தில் கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சியகம், பார்வையாளர் அரங்கம் போன்றவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவக வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் அஞ்சலி செலுத்துதல், சிலை திறப்பு, தேசிய நினைவக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

news.lankasri thanks

No comments:

Post a Comment