அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 27 February 2017

படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் : கிராமப் புறங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை



வத்திராயிருப்பு: பஸ்களில் மாணவர்கள் தொங்கிப் பயணம் செய்வதால்
, வத்திராயிருப்பு பகுதி கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கூமாப்பட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பள்ளிகளில் படித்து வருகின்றனர். காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும், வத்திராயிருப்பில் இருந்து கிராமப் புறங்களுக்கு பஸ் சேவை குறைவாக இருப்பதால், பள்ளி மாணவ, மாணவியர் ஆபத்தையும் உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

எனவே, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமப் புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ்களில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அச்சமயங்களில் போலீசார் இருந்தும் மாணவ, மாணவியரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, வத்திராயிருப்பை மையமாகக் கொண்டு கிராமப் புறங்களுக்கு அதிக பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


news dinakaran thanks

1 comment: