அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 9 December 2020

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பி நீண்ட நாட்களாக ஆபத்தாகவும் தொய்வாகவும் இருந்ததால் அதனை நமது ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் இன்று புதிய மின் கம்பம் அமைத்து சரி செய்யப்பட்டது. மேலும் தற்போது புதிதாக அமைக்கபட உள்ள தார்சாலைக்கு இடையூராகவும் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்து இருந்த மின் கம்பத்தை அகற்றி புதியதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பல வருடங்களாக மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த பனை ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. மற்றும் நமது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் தொய்வான இடங்களில் புதிய மின் கம்பங்கள் அமைக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் கூடிய விரைவில் அனைத்து மின் கம்பங்களும் சரி செய்யப்படும். என்றும் மக்கள் பணியில்.. நமது ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி அவர்கள்.



Sahab appakutty

No comments:

Post a Comment