அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 19 July 2021

அனைவருக்கும் தியாகத்திரு நாள் நல்வாழ்த்துக்கள்!!!அன்புடன் sahab appakutty

படைத்த ரப்புல் ஆலமீனின் மேல் கொண்ட பாசத்தால் இறை கட்டளை அனைத்தையும் செயல்படுத்த ஒரு குடும்பம் செய்த தியாகத்திற்காக ரப்புல் ஆலமீன் கொடுத்த பெரும் பரிசு தான் தியாகத் திருநாள்.

இப்ராஹீம் (அலை), அவரது மனைவி ஹாஜிரா (அலை), மகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரது “செயல்கள்” தான் இன்று ஒட்டு மொத்த மனித சமூகமும் ஹஜ்ஜை நிறைவேற்ற செய்யும் “அமல்களாக” ரப்புல் ஆலமீன் கடமையாக்கிவிட்டான். 

நெருப்பில் பொசுக்குவதற்காக நம்ரூத்தும் அவனது பரிவாரங்களும் நெருப்பை பல நாள்களாக எரித்து கொடும் நெருப்பாக மாற்ற நினைத்தது, இப்ராஹீம் (அலை) கட்டி வைத்து கண் முன் ஒவ்வொரு நாளும் நெருப்பின் கோரத்தை காண செய்தது, இப்ராஹீமை உள்ளத்தால் பலவீனமடைய வைத்து அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். அவர்கள் நினைத்திருந்தால் ஒரே நாளில் நெருப்பில் போட்டு பொசுக்கி இருக்கலாம். ஆனால் அவர்களது நோக்கம் இப்ராஹீமை பயமுறுத்தி படிய வைத்திட வேண்டும் என்பதே. 

உண்மை விசுவாசிகள், ஒரு போதும் அச்சப்பட மாட்டார்கள் என்பதை அன்றைய நம்ரூத்தும், இன்றைய அவனது கூட்டாளிகளும் அறியாமலேயே இருக்கின்றார்கள். "ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்" என்ற உறுதியான வார்த்தை மட்டுமே உண்மை விசுவாசிகளின் பதில்.

ஹாஜிரா அம்மையார் ஓடிய சஃபா, மர்வா எனும் தொங்கு ஓட்டமும், இப்ராஹீம் (அலை) சைத்தானை கல்லால் எரிந்து துரத்தியதும், இறைவனின் ஆணைக்கினங்க இஸ்மாயில் (அலை) காலடியில் இருந்து பீரிட்டு வந்த ஜம் ஜம் தண்ணீரும், கழுத்தை அறுக்க கத்தியை உயர்த்திய இப்ராஹீம் (அலை)-க்கு ஆட்டை அறுத்து பலியிட ஆணையிட்ட கருணைக்கும் பின்னால் பெரும் படிப்பினைகளும், நடைமுறை படுத்த வேண்டிய செயல்முறைகளும் நமக்கு ஏராளம் உண்டு.

இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் ....

சைத்தானுக்கும், சைத்தானின் கூட்டாளிகளுக்கும் அடிபனிந்து கோழைகளாக மண்ணுக்கு மேல் வாழ்வதை விட; இறை பொருத்ததிற்காக, தியாகத்தின் மூலம் ஈமானை மெய்ப்படுத்துவதால் வரும் இழப்புகளை ஏற்று கொண்டு பூமிக்கு கீழ் வாழ்வது தான் சிறந்த வாழ்வு.

தகப்பலல்லாஹு
மின்னா வ மின்கும்!

அல்லாஹ் நம் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், நற்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, இம்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றியை வழங்கிடுவானாக!

இந்த தியாகத் திருநாள் உங்கள் உள்ளத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரட்டும்!

அல்லாஹ்வின் அளவிலா அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் எப்போதும் கிடைக்கட்டும்!

அனைவருக்கும் தியாகத்திரு நாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன் 
வலசை பைசல்

No comments:

Post a Comment