அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 26 March 2023

டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் (பி. 1942)தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர்!அரசு தர முன்வந்த எந்தச் சலுகையையும் ஏற்காதவர்! காஜி பொறுப்புக்காக அரசிடமிருந்து எந்த ஊதியத்தையும் பெறாதவர்! திருமண சான்றிதழ், மார்க்கச் சட்ட விளக்கங்கள் கேட்டு வரும் மக்களுக்கு பள்ளிவாசல் திண்ணையிலிருந்தே தனது பணியை இன்றுவரை நிறைவேற்றிவருபவர்!இதுவரை லட்சக்கணக்கான சான்றிதழ்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்! எவரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை!அரசு பல முறை அவரது குடும்பப் பள்ளிவாசலையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் மேம்படுத்த முன்வந்தபோதேல்லாம் வேண்டாமெனத் தவிர்த்தவர்!டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அவர்கள் புகழ்பெற்ற ‘நாயித்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்!இவரது குடும்பம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தது என்றும் நபித்தோழர்கள் பரம்பரையைச் சேர்ந்தது என்றும் சொல்லப்படுகின்றது!இவரது குடும்பத்தைச் சேர்ந்த மார்க்க மேதைகள் நவாப்கள் ஆங்கிலேயர்கள் காலம் தொட்டே அரசு காஜிகளாக பொறுப்பு வகித்து வருகிறார்கள்! டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அவர்கள் இக்குடும்பத்தின் 19 ஆவது காஜி ஆவார்!புகழ்பெற்ற மார்க்கமேதை காஜி பத்ருத் தவ்லா ‘நாயித்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!இறையச்சம், மார்க்க ஞானம், நேர்மை, எளிமை ஆகியவை டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அவர்களின் மிகச்சிறந்த பண்புகள்!சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஃப்சலுல் உலமா, M.Phil., Ph.D. பட்டங்கள் பெற்றவர்!ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரபுத்துறையில் M.A. பட்டம் பெற்றவர்!புகழ்பெற்ற எகிப்து அல்அஸ்கர் பல்கலைக் கழகத்தில் நான்காண்டுகள் மார்க்கப் பிரிவில் உயர்நிலை பட்டம் பயின்றவர்கள்!அரபு, உருது, ஆங்கிலம், தமிழ், பாரசீகம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமைப் பெற்றவர்கள்!சென்னை, புதுக்கல்லூரி அரபுத்துறையில் 1983 முதல் 2000 வரை அரபுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்கள்!தனது 81ஆவது வயதிலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சமூக அக்கறையுடன் சேவையாற்றும் மகத்தான மனிதர் டாக்டர் சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப்! தமிழ் நாடு கண்ட உயர்ந்த மனிதர்களுள் இவர்களும் ஒருவர்!எவரையும்திட்டாதீர்கள்!நல்லவர்களைத் திட்டவே திட்டாதீர்கள்!எச்சரிக்கையாய் இருங்கள்... இறைகோபத்திடம்!Written by : நேசமுள்ள சகோதரர், DrJahir Husain Jamia Madras உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர், பன்மொழிப் புலவர், இறை அழைப்பாளர், பன்னூல் ஆசிரியர் டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள்... காஜி சாகிபின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவல்!

No comments:

Post a Comment