முதுகில் குத்தப்பட்ட
முதல் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
'நட்பு'என்ற பெயரில்
நாடகமாடியவர்களின்
பெயர் எழுதி இருந்தது...
இரண்டாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
ஆபத்திலும் அவசரத்திலும்
யாருக்கெல்லாம் விழுந்தடித்து
ஓடினேனோ அவர்களின்
பெயர் அழகாய் எழுதி இருந்தது...
மூன்றாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
யாரையெல்லாம்
உயரத்திற்கு உயர்த்தி
அழகு பார்த்தேனோ
,, அவர்களின் முகத்திரை கிழிந்து
அப்படியே தொங்கியது...🤔
படித்ததில் பிடித்தது....
No comments:
Post a Comment