அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 27 January 2013

பிரேசில் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: 200 பேர் பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 27 சனவரி 2013, 01:12.44 பி.ப GMT ]
பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இரவு விடுதியில் நடந்த இசை கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் விபத்து நடந்த போது சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இரவு விடுதிக்குள் இருந்தனர்.
இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர்.
இதுவரை 159 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிகம் பேர் உயிர் இழந்திருப்பார்கள் எனவும் தெரிகிறது.
அனேகமாக, பலி எண்ணிக்கை 200ஐ தாண்டலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மேஜர் ஜெர்சன் டா ரோசா பெனரரா கூறியுள்ளார்.

newsonews thanks

No comments:

Post a Comment