சென்னை மாநகர அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பி செல்கின்றதாகவும், மொத்த கொள்முதல் டீசல் விலையை விட, சில்லறை கொள்முதல் டீசல் விலை குறைவாகவே இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள சுதந்திரத்தின் படி, எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை உயர்வை நிர்ணயித்து உள்ளன. அதன்படி டீசல் மொத்த கொள்முதல் விலை இரட்டை டீசல் விலை உயர்வாக இருக்கிறது என்றும், இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று கூறி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரட்டை டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கவிலை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இந்நிலையில் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய, சென்னை மாநகரப் பேருந்துகளில் தனியார் பெட்ரோல் பங்குகளில் சென்று டீசல் போட்டுக் கொள்ள போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன் படி, இன்று காலை முதல் அனைத்து மாநகரப் பேருந்துகளும் தனியார் பங்குகளில் சென்று டீசல் நிரப்பி வருகின்றன. இதனால் மற்ற வாகனங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னையில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
\
4tamilmedia. thanks
No comments:
Post a Comment