அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 2 January 2013

புதுச்சேரி மாணவி மீது பாலியல் பலாத்காரம்! தொடரும் பாலியல் வன்முறைகளால் மக்கள் அச்சம்



புதுச்சேரியில் திருபுவனையைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் பேருந்து நடத்துனர் உட்பட இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஜி. சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
டியூசன் வகுப்புக்குச் சென்ற இந்தப் பெண் அவருக்கு நன்கு தெரிந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு,
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருபுவனையைச் சேர்ந்த இந்த பிளஸ் டூ படிக்கும் இந்த மாணவி விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
இவர் திருபுவனையில் கடத்தப்பட்டு விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு புதுச்சேரி அரசாங்க மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையும், மருத்துவ சோதனையும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் இருவர் சம்பந்தப்பட்டதாக அந்த மாணவி புகார் செய்துள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பெண்ணுரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தச் செய்தி புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


tamilcnn thanks

No comments:

Post a Comment