சமையல் எரிவாயு உருளை விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிப்பது
தொடர்பாக விரைவில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை
அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம்
பேசுகையில், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை மற்றும் உள்நாட்டில் உற்பத்தி
செய்யப்படும் எரிவாயுவின் விலை ஒரே மாதிரியாக இருப்பதற்கு இந்த கொள்கை வழிவகுக்கும்
என்று தெரிவித்துள்ள அவர், இந்த கொள்கை குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிப்பது
தொடர்பாக இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறினார்.
மேலும், இறக்குமதி
செய்யப்படும் எரிவாயுவின் விலை நாட்டுக்கு நாடு வேறுபடுவதாகவும் மொய்லி
குறிப்பிட்டார். எரிவாயு விலையில் சமநிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே
தற்போதைய நோக்கம் என்று கூறியுள்ள அவர், வரும் 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில்
எரிவாயுவை கையாளுவதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.
.tamilantelevision. thanks
No comments:
Post a Comment