அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 31 January 2013

பர்கரில் குதிரை கறி: வினியோகஸ்தருக்கு தடை

[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 
அயர்லாந்தில் பர்கர் உணவில் குதிரை கறி வைத்து விற்கப்பட்ட சம்பவத்தை அடுத்து குதிரை கறி வினியோகஸ்தருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்களில் பர்கரில் குதிரைக் கறி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து அயர்லாந்து விவசாயத் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அங்குள்ள பர்கர் தயாரிப்பு மையங்களில் கால்நடை மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.
சோதனையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்கோ நிறுவனம் தான் குதிரை கறி அடங்கிய பர்கர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது குதிரை கறி பர்கர்களை வினியோகித்த “சில்வர் கிரஸ்ட்” என்ற நிறுவனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெஸ்கோ நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் டிம் ஸ்மித் குறிப்பிடுகையில், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு என்பது மிக முக்கியம்.
இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்க, கறி உணவுகளில் டி.என்.ஏ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் எங்கள் நிறுவனத்திற்கு குதிரை கறியை வினியோகித்த சில்வர் கிரஸ்ட் நிறுவன சேவையை ரத்து செய்து விட்டோம் என்றார்.

newsonews thanks

No comments:

Post a Comment