அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 31 January 2013

பாகிஸ்தான் பொய் சொல்கிறது : மத்திய அமைச்சர் அந்தோணி




பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய வீரர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப் பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் சொல்லியிருப்பது உண்மையில்லை என்றும் பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.

கடந்த மாதம் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேர், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் தலை துண்டிக்கப்படு கொலை செய்யப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தமது இராணுவ வீரர்களும்  இந்திய ராணுவ வீரர்களால் பலமுறை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள அந்தோணி, "பாகிஸ்தான் தவறான தகவலை கூறியுள்ளது. இதில் உண்மையில்லை. ராணுவ வீரர்கள், மற்ற நாட்டு ராணுவ வீரர்களை தலைவெட்டி கொள்வது என்பது போர்குற்றம். இந்த தவறை ஒருபோதும் இந்தியா செய்திருக்க முடியாது" என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இரு நாட்டு எல்லையிலும் நிலவி வந்த பதற்றம் ஒருவழியாக குறைந்து இப்போது அமைதி நிலவி வருவதாகவும் அந்தோணி தெரிவித்துள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment