புதன், 23 ஜனவரி 2013 13:02

இதுபோன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடுவோர்
பெரும்பாலும் வெளியூரைச்சேர்ந்த புதிய குற்றவாளிகளாக இருப்பதால், காவல்துறையினர்
குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், காரைக்காலின்
முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசை
வலியுறுத்தி வந்தனர்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்த, மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு கேமரா நிறுவனத்தினரை அழைத்து, அவர்களின் கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று காலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கேமராக்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி கூறியதாவது:
"காரைக்கால் மாவட்ட ஆட்சியர்ர் அலுவலகம், திருநள்ளாறு நளன் குளம் மற்றும் ஜூவல்லரி, பெரும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூர், நண்டலாறு, பேருந்து நிலையம், பாரதியார் சாலையின் சிக்னல் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசித்து வருகிறோம். அதற்காக சில நிறுவனங்களின் கேமரா மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்தவுடன் கேமரா விரைவில் பொருத்தப்படும். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறையினர் உடனே அங்கு செல்லவும், குற்றவாளிகளை உடனே இனம் கண்டு கைது செய்யவும் ஏதுவாக இருக்கும்" என்றார்.
தகவல்: மு.இ. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்த, மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு கேமரா நிறுவனத்தினரை அழைத்து, அவர்களின் கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று காலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கேமராக்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி கூறியதாவது:
"காரைக்கால் மாவட்ட ஆட்சியர்ர் அலுவலகம், திருநள்ளாறு நளன் குளம் மற்றும் ஜூவல்லரி, பெரும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூர், நண்டலாறு, பேருந்து நிலையம், பாரதியார் சாலையின் சிக்னல் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசித்து வருகிறோம். அதற்காக சில நிறுவனங்களின் கேமரா மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்தவுடன் கேமரா விரைவில் பொருத்தப்படும். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறையினர் உடனே அங்கு செல்லவும், குற்றவாளிகளை உடனே இனம் கண்டு கைது செய்யவும் ஏதுவாக இருக்கும்" என்றார்.
தகவல்: மு.இ. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்
.inneram THANKS
No comments:
Post a Comment