February , 2013
சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத்தை விடுவித்து
தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திபெத்திய லாமாக்கள் நீண்ட
காலமாக போராடி வருகின்றனர்.
திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா இமாச்சல பிரதேசத்தில்
தஞ்சமடைந்து லாமாக்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்.
சமீப காலமாக தங்களது தனிநாடு கோரிக்கைக்காக போராடும் லாமாக்கள் தீக்குளித்து
தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில், சீனாவின் தென்மேற்கில் உள்ள கன்சு மாகாணத்தில்
20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று கோயிலின் முன்னர்
தீக்குளித்து பலியானார். இதே போல், குவிங்காய் மாகாணத்தில் மற்றொரு வாலிபர் நேற்று
முன்தினம் தீக்குளித்து உயிரிழந்தார்.
கடந்த 2009ம்
ஆண்டு முதல் தனி திபெத் கோரிக்கைக்காக 106 பேர்
தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment