அதிகமாக தேடப்பட்டுவரும் 109 தீவிரவாதிகளின் பெயர்களை பாகிஸ்தான் அறிவித்தது
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
உலகில் வன்முறை நடக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தான் அரசு, லஷ்கர்
இ ஜங்க்வி, தெஹ்ரீ இ தலிபான், ஜெய்ஸ் இ முகமது மற்றும் ஷியா முஸ்லிம் இயக்கங்களான
தெஹ்ரீ இ ஜாப்ரியா, ஷிபா இ முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களில் உள்ள 109
தீவிரவாதிகளின் பெயர்களை தேடப்படும் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளது.
அதில், 2002-ம் ஆண்டு கராச்சி ஷெராட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த 11 பிரெஞ்ச்
என்ஜினியர்கள் கொல்லப்பட்ட வழக்கிலும், 2004-ம் ஆண்டு பிரதமராக இருந்த சௌகத் அசிஸ்
மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலிலும் ஈடுபட்ட லஷ்கர் இ ஜங்க்வி தீவிரவாதி,
மதி உர் ரகுமான் இந்த பட்டியலில் முக்கிய குற்றவாளியாக பெயரிடப்பட்டு இவன் தலைக்கு
பாகிஸ்தான் அரசு 1கோடி ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2003-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு எதிராக நடந்த தற்கொலைப்படை
தாக்குதலில் தீவிரவாதி சோட்ட இப்ராஹிம் என்றழைக்கப்படும் மன்சூர் என இந்த பட்டியல்
நீண்டுகொண்டே போகிறது.
இவனது தலைக்கு அங்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்
குவெட்டா நகரில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 200
பேர் கொல்லப்பட்டனர். அதில் தொடர்புடைய லஷ்கர் இ ஜங்க்வி அமைப்பினர் 28 பேரும் அந்த
அதிகம் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment