ஈராக் நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி.
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
ஈராக் நாட்டிலுள்ல சன்னி, ஷியா
முஸ்லிம் தீவிரவாதிகளுக்கிடையிலான சண்டை தீவிரமடைந்து வருகிறது. அங்கு ஷியா
முஸ்லிம் பிரதம மந்திரி நௌரி அல் மாலிகியின் ஆட்சிக்கு எதிராக, பல்லாயிரக்கணக்கான
சன்னி முஸ்லிம்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான, பாக்தாத் வடமேற்கு
பகுதியில் ஒரு கார் குண்டு உள்பட இரு குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்திலேயே
15 பேர் கொல்லப்பட்டனர். 40-ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும், பல பொதுஇடங்களில் தொடர்குண்டுத் தாகுதல்கள் நடத்தப்பட்டன, இதில் 7
பேர் கொல்லப்பட்டு 50-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள்,
அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தின் வேலையாக இருக்கலாம்
என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment