போர்க்குற்றவாளியான பங்களதேஷ் தலைவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையின் எதிரொலியா இடம்பெற்ற வன்முறையில் 34 பேர் பலி
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
1971 ஆம் ஆண்டு சுதந்திரம் வேண்டி பாகிஸ்தானிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே
போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியின் துணைத்
தலைவர், தல்வார் ஹூசைன் சயீதி மீது போர்குற்றம் சுமத்தப்பட்டது.
தீப்பொறி இஸ்லாமிய பேச்சாளரான சயீதி மீது அப்போது, இந்து கிராமத்திற்குள்
புகுந்து கலகம் ஏற்படுத்துதல், இந்து சகோதரிகள் 3 பேரை கடத்தி கற்பழித்தல், மதம்
மாற்றம் செய்தல், கொள்ளை அடித்தல், கலகம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகள்
தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அவர் ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பாக 1996-2008 ஆண்டுவரை எம்பியாகவும்
இருந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு அவர் மீது, சர்வதேச நீதிமன்றம் 20
குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்நிலையில், பங்களதேஷ் அரசில் சட்டத்தில் திருத்தம்
கொண்டுவரப்பட்டு, சயீதி இன்னும் 90 நாட்களுக்குள் தூக்கிலிடப்படுவார் என்றும்
அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பங்களதேஷ் முழுவதும் ஜமாத் இ
இஸ்லாமியக் கட்சியினர் அரசுக்கு எதிராக நேற்று வன்முறையில் இறங்கினர்.
இதில் 4 பொலிஸார் உட்பட 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில்,
இந்துக்கள் கிராமமும், கோவில்களும் சூறையாடப்பட்டன. இது, கடந்த இருபது வருடங்களில்
இல்லாத மிகமோசமான வன்முறை என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment