அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 February 2013

மாலி நாட்டில் இராணுவம் தீவிரவாதிகளிடையே மோதல்: 78 பேர் பலி


[ ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013, 03:20.54 மு.ப GMT ]
மாலி நாட்டின் வடக்கு பகுதியில், கடந்த ஆண்டு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகள் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து கொண்டனர். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காலனி நாடான மாலிக்கு உதவ பிரான்ஸ் முன்வந்தது. எனவே கடந்த மாதம் 4000 பிரான்ஸ் வீரர்களின் துணையுடன் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அவர்கள் வடபகுதியில் உள்ள இபோகாஸ் மலைப்பகுதியில் மறைந்துகொண்டு அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்கள். அங்கு கிடல் நகரில் 1800 சாட் நாட்டு இராணுவத்தினரும் மாலிக்கு உதவியாக பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று 5 வாகனங்களில் சென்ற தீவிரவாதிகளை வழிமறித்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில், 13 சாட் நாட்டு இராணுவ வீரர்களும், 65 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இப்பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தினை அறிய அமெரிக்கா, ஆளில்லா விமானங்களை நைஜர் நாட்டில் இருந்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

newsonews thanks

No comments:

Post a Comment