அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 1 February 2013

தமிழக சட்டப் பேரவை கூட்டம் துவங்கியது : ஆளுநர் உரையுடன் துவக்கி வைத்தார்!




இன்று காலை இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக்கூட்டத் தொடர் துவங்கியது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதாலேயே, ஆளுநர் ரோசய்யா உரையுடன் துவங்கியது.

காலை 9.55 மணிக்கே சட்டபேரவை வளாகம் வந்த ஆளுநர் ரோசய்யாவை, சபாநாயகர்  தனபால்  மரியாதை  நிமித்தம்  வளாகத்தினுள்  அழைத்து  சென்று அமரவைத்தார்.  பின்னர் ஆளுநர் பொருளாதார சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருவது குறித்து உரையாற்றினார். ஆளுநரின் உரையை தமிழாக்கம் செய்து ஒருவர் வாசிக்க, ஆளுநரின் உரை முடிந்தது.

இந்த கூட்டத் தொடர் ஒருவாரகாலம் வரை நடக்கும் என்றும் தெரியவருகிறது. வரும் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர், திங்கள் அன்று தொடங்க இருக்கும் கூட்டத் தொடரின் திங்கள் அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி சொல்வதும் தீர்மானங்கள் பற்றிய விவாதமும் நடக்கும் என்றும் தெரிய வருகிறது.

நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மின்வெட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் என்று  அலசி ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் படும் என்றும் தெரியவருகிறது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment