Friday, 01 February 2013 07:35
விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் தமிழக உள்துறை செயலரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக கமலின் சகோதரர், சந்திரஹாசன் கூறியதாவது, "விஸ்வரூபம் பட பிரச்சனையில் சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கமலை சந்தித்து பேசினர். படத்தில் அவர்கள் நீக்க சொன்ன காட்சிகள், வசனங்களை நீக்கி விடுவதாக கமல் தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமிய அமைப்புக்களுடன் பேசி, சுமுக உடன்பாடு காணுமாறு தெரிவித்து இருந்தார். இந்தியில் விஸ்வரூபம் இன்று வெளியாவதால் கமல் மும்பை சென்றுள்ளார். இதனால் எங்கள் தரப்பில் இஸ்லாமிய சகோதரர்களுடன் நானும், இயக்குனர் அமீரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு காணப்படும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இது குறித்து மனித நேய கட்சி எம் எல் ஏ, ஜவாஹிருல்லா கூறுகையில், "பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, 24 இஸ்லாமிய இயக்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு, விஸ்வரூபம் படத் தயாரிப்பாளர் மற்றும் அரசு தரப்பு அதிகாரிகள் பங்கேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்தான், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக உள்துறை செயலரிடம் கடித்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அழைக்கும் பட்சத்தில், இன்று பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளது
4tamilmedia. thanks
No comments:
Post a Comment