ராமேசுவரம், பிப்.
ராமேசுவரம் ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது42), மீனவர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் கடை தெருவுக்கு சென்றார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றி வந்த லாரி ஒன்று சேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சேகர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் நகர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சேகர் இறந்து விட்டார்.
விபத்தில் இறந்து சேகருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்த விபத்து குறித்து ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பேச்சாளை மீன்களை லாரியில் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் ஆத்திகாடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது42), மீனவர். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமேசுவரம் கடை தெருவுக்கு சென்றார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றி வந்த லாரி ஒன்று சேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சேகர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் நகர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சேகர் இறந்து விட்டார்.
விபத்தில் இறந்து சேகருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்த விபத்து குறித்து ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடை செய்யப்பட்ட பேச்சாளை மீன்களை லாரியில் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.maalaimalar thanks
No comments:
Post a Comment