அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 21 February 2013

மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது!


 மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது!


February 22, 2013  09:27 am
ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன.


கொடூர குற்றவாளிகளுக்கு கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மிக கொடூர குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பதை, ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும், இன்னமும், தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது. 
  
அந்நாட்டில் புதிய அரசு, கடந்த, டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு, நேற்று தான், முதல் முறையாக, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. நேற்று அதிகாலை, மூன்று வெவ்வேறு இடங்களில், மூன்று கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பொதுவாக, தூக்கு தண்டனை கைதிகளுக்கு, தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவலை, ஜப்பான் தெரிவிப்பதில்லை. எனினும், புதிய அரசு, நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்நாட்டில், இதற்கு முன், கடந்த செப்டம்பரில் தான், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்னும், 134 பேர், தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.

thamilan thanks

No comments:

Post a Comment