By ராமநாதபுரம்,
First Published : 16
February 2013 02:18 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் திமிங்கிலம் ஒன்றின் சுமார் 150
கிலோ எடையுள்ள கொழுப்பு கரை ஒதுங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப் பகுதி
மீனவர்கள் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் திமிங்கிலம் ஒன்றின் கொழுப்பு மற்றும் தோல் ஆகியன மிதந்து வந்து கரை ஒதுங்கி நிற்கிறது. இது மிகுந்த துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் இதை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் தங்கச்சிமடம் நாலுபண்ணை கடற்கரைப் பகுதியில் சுமார் 600 கிலோ எடையுள்ள 8 அடி நீள டால்பின் ஒன்றும் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அதனை வனத் துறையினர் அந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.
dinamani. thanks
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் திமிங்கிலம் ஒன்றின் கொழுப்பு மற்றும் தோல் ஆகியன மிதந்து வந்து கரை ஒதுங்கி நிற்கிறது. இது மிகுந்த துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் இதை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் தங்கச்சிமடம் நாலுபண்ணை கடற்கரைப் பகுதியில் சுமார் 600 கிலோ எடையுள்ள 8 அடி நீள டால்பின் ஒன்றும் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அதனை வனத் துறையினர் அந்த இடத்திலேயே புதைத்துவிட்டனர்.
dinamani. thanks
No comments:
Post a Comment