அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 24 February 2013

ஐ.நா. உதவியுடன் டி.ஆர். காங்கோ - தீவிரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றம்


[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 01:15.32 மு.ப GMT ]
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டி.ஆர். காங்கோ இயற்கை வளம் மிக்க நாடாகும். ஜோசப் கபிலா தலைமையிலான அரசு, கிழக்குப்பகுதியை புறக்கணிக்கப்பதாக கூறி, எம்-23 தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 15 வருடங்களாக இங்கு நடைபெற்றுவரும் ஆயுதப் போராட்டத்திற்கு, அப்பகுதியில் 8,00,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து, அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இவர்களுடன் அமைதிக்கான ஒப்பந்தம் கடந்த மாதம் உகாண்டா உதவியுடன் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க யூனியனின் 11 நாடுகள் துணையுடன் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில், கின்ஷாசா அரசுக்கும், எம்-23 தீவிரவாத குழுக்களுக்கு இடையே ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தலைமையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், டி.ஆர். காங்கோவில் அமைதியையும், நிலைத்தன்மையும் ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.


newsonews thanks

No comments:

Post a Comment