- February 2013 16:46
முதல்வர் ஜெயலலிதாவுடனான திடீர் சந்திப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்காக அல்ல என்று மதிமுக
பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ, நேற்று காஞ்சீபுரம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதுவினால் தமிழகம் சீரழிந்து வருகிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6வது நாளாக அண்ணா பிறந்த காஞ்சீபுரத்திற்கு நடைபயணமாக வந்துள்ளேன்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 1200கிலோ மீட்டர் நடந்தேன். அப்போது இல்லாத எழுச்சி இந்த நடைபயணத்தில் கண்டேன். வழிநெடுகிலும் தாய்மார்களும், சகோதரிகளும் என்னை சந்தித்து கைகுலுக்கு பூரண மது விலக்குக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்தும் இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெறுவோம்.
நடைபயணத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியா என்றால் இது திட்டமிட்டு நடந்த சந்திப்பு இல்லை எதேச்சையாக நடந்தது அரசியல் நடைமுறை நாகரீகத்தோடு நடந்தது. இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இதில் லாப கணக்கு பார்க்க கூடாது பூரண மதுவிலக்கு அமுல்படுத்த கோருவதே எங்களது நோக்கமாகும்." என்று வைகோ கூறியுள்ளார்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment